மாறி மாறி தூதுவிடும் ஓபிஎஸ்! - கண்டுகொள்வாரா இபிஎஸ்! - அதிமுகவின் புது வியூகம் எடுபடுமா?
சென்னை தி நகரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சர் ஸ்டாலினையும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் ஓ.பன்னீர் செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை தி நகரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரிந்து கிடக்கும் அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் இன்று அனைவரது குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அவ்வாறு இணைந்து போட்டியிட வேண்டும். எதிர் வரும் தேர்தலில் அப்படி போட்டியிட்டால் நம்மை யாராலும் வெல்ல முடியாது. அப்படி ஒரு சூழல் உருவாகி இருக்கிறது.
பிரிந்து கிடக்கும் அதிமுக இணையக்கூடாது என்று நினைக்க கூடிய ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி தான். உலகத்திலேயே எங்கும் இல்லாத கூட்டணியாக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஒன்றாக இணைந்திருக்கிறது.
முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவரை பார்த்து ஹலோ ஹலோ சுகமா? என்று கேட்கிறார். அதற்கு எடப்பாடி பழனிசாமி ஆமா நீங்க நலமா என்கிறார். இப்படித்தான் சட்டமன்ற நிகழ்ச்சி போய்க்கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

