மேலும் அறிய

EPS Meets Modi: அதிமுக தொண்டர்கள் யாரும் அதிருப்தியில் இல்லை - பிரதமரை சந்தித்த பின் ஈபிஎஸ் பேட்டி..!

திமுக ஆட்சிப்பொறுப்பேற்று மூன்று மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், அவர்களை பற்றி பிரதமரிடம் பேசவில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த பின் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி,

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தோம், தமிழகத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும் என நானும் ஓபிஎஸும் பிரதமரிடம் வலியுறுத்தினோம். மேகதாது அணையை பொறுத்தவரை முதல்வராக ஜெயலலிதா இருக்கும்போதுசரி, ஓபிஎஸு ம் நானும் முதல்வராக இருந்தபோதும்சரி அங்கு அணை கட்டக்கூடாது என்பது தான் எங்கள் நிலைப்பாடு, மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும், தமிழ்நாட்டில் 16 மாவட்டங்கள் காவிரி நீரை குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ளன. எனவே மேகதாது அணை கட்ட மத்திய அரசு உதவக்கூடாது என கோரிக்கை வைத்தோம், நீர் பற்றாக்குறை மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டோம், தமிழகத்தில் பல்வேறு சாலைகளை அமைக்க மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ள நிலையில் அதனை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கவும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்வதை தடுத்து நிறுத்தவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.

தேர்தலுக்கு பிறகு அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் திமுகவில் இணைவது குறித்த கேள்விக்கு, ‘’தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அவர்கள் விலகி சென்று இருக்கிறார்கள், தொண்டர்கள் யாரும் அதிருப்தியில் இல்லை, கட்டுக்கோப்பாக இருக்கும் இயக்கம் அதிமுக’’.

திமுக  ஆட்சி குறித்து பிரதமரிடம் பேசினீர்களா? என்ற கேள்விக்கு ’’திமுக ஆட்சிப்பொறுப்பேற்று மூன்று மாதங்கள்தான் ஆகியுள்ள நிலையில் எனவே அவர்களை பற்றி பிரதமரிடம் பேசவில்லை, அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகத்தின் கோரிக்கைகளை பிரதமரை சந்தித்து பேசியுள்ளோம்’’. 

தமிழகத்தில் லாட்டரி சீட்டை கொண்டு வரும் திட்டமில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, ’’எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தமிழ்நாடு அரசு லாட்டரி சீட்டு கொண்டு வர உள்ளதாக அறிக்கை விட்டேன்; தமிழக அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர், தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டை கொண்டுவரவில்லை என்றால் அது நல்லதுதான்’’மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ’’இதுவரை மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க யாரிடமும் நாங்கள் வாய்ப்பு கேட்கவில்லை, வாய்ப்பு கிடைத்தால் சென்று சந்திப்போம்’’ என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக பேசப்பட்டதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
TN New Corporation: தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் – எங்கெல்லாம்? அமைச்சர் அறிவித்த குட் நியூஸ்
Stalin on EPS Delhi Trip: இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Vijay: குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
குருத் துரோகியா விஜய்.? மரணப் படுக்கைல இருந்தும் ஹுசைனிய கண்டுக்கலையே.!!
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Embed widget