மேலும் அறிய

Mandous Cyclone: நாகையில் சீற்றத்துடன் காணப்பட்ட கடல்பகுதிகள்...! கொட்டும் மழையிலும் ஆய்வு செய்த தேசிய பேரிடர் மீட்பு படை..!

நாகையில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளாக பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியிருக்கும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் இரவு மணியளவில் புயலாக 'மாண்டஸ்' வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. தொடர்ந்து தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு 440 கிலோமீட்டர்  தொலைவிலும், காரைக்காலுக்கு 350 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி மாண்டஸ் புயலின் வேகம் மணிக்கு 12 கி.மீ லிருந்து 13 கி.மீ-ஆக அதிகரித்திருக்கிறது. 


Mandous Cyclone: நாகையில் சீற்றத்துடன் காணப்பட்ட கடல்பகுதிகள்...! கொட்டும் மழையிலும் ஆய்வு செய்த தேசிய பேரிடர் மீட்பு படை..!

புயலின் காரணமாகக் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கக் கூடும். மேலும், இன்று நள்ளிரவு வேளையில், புதுச்சேரி - ஸ்ரீ ஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையைக் கடக்கலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது அதி தீவிர புயலாக தீவிரமடைந்துள்ள நகர்ந்து, இன்று இரவு சற்று வலுவிழந்து கரையைக் கடக்க வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.


Mandous Cyclone: நாகையில் சீற்றத்துடன் காணப்பட்ட கடல்பகுதிகள்...! கொட்டும் மழையிலும் ஆய்வு செய்த தேசிய பேரிடர் மீட்பு படை..!

புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் சென்னை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இன்று நடக்கவிருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல், மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.


Mandous Cyclone: நாகையில் சீற்றத்துடன் காணப்பட்ட கடல்பகுதிகள்...! கொட்டும் மழையிலும் ஆய்வு செய்த தேசிய பேரிடர் மீட்பு படை..!

இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் மாலை முதல் கனமழை பெய்ய  தொடங்கி உள்ளது. இதனிடையே நாகைக்கு வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் நாகை கலங்கரை விளக்கு துறைமுகத்தில் கொட்டும் மழையில் ஆய்வு மேற்கொண்டனர். புயல் எச்சரிக்கை காரணமாக சீற்றத்துடன் காணப்படும் கடல் பகுதிகளில் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் நிற்பது, செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என ஆய்வில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்தனர். மேலும், நாகை மாவட்டத்தில் ஏற்படும் மழை மற்றும் புயல் பாதிப்புகளை சமாளிக்க 25 தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ள நிலையில் மாநில பேரிடர் மீட்பு படையினர் 50 பேர் கூடுதலாக வருகை தந்துள்ளனர்.


Mandous Cyclone: நாகையில் சீற்றத்துடன் காணப்பட்ட கடல்பகுதிகள்...! கொட்டும் மழையிலும் ஆய்வு செய்த தேசிய பேரிடர் மீட்பு படை..!

இந்த சூழலில் நாகை மாவட்டத்தில்  நாகை மாவட்டத்தில் நாகை , நாகூர், செருதூர், வேளாங்கண்ணி, அக்கரைப்பேட்டை, சிக்கல், திருமருகல், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடங்கி உள்ளதால் மேகம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், கடல் சீற்றம் காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த காற்றும் வீசதொடங்கியுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக நாகை துறைமுகத்தில் 5 -ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

Helpline Numbers: மாண்டஸ் புயல்: மழை..மின்வெட்டு.. மரம் விழுதல்.. சென்னையில், புகார்களுக்கு இந்த உதவி எண்களுக்கு அழைக்கவும்

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget