மேலும் அறிய

Nadavavi Kinaru : 15 அடி பூமிக்குள் எழுந்தருளிய பெருமாள்..! நள்ளிரவில் நடந்தேறிய அதிசய திருவிழா.!

Nadavavi Kinaru : " சித்ரா பௌர்ணமியை ஒட்டி காஞ்சி வரதராஜப் பெருமாள் , பூமிக்கடியில் 15 அடி ஆழத்திலுள்ள நடாவவி கிணறு கல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் "

சித்ரா பௌர்ணமியை ஒட்டி காஞ்சி  வரதராஜப் பெருமாள் , பூமிக்கடியில்  15 அடி ஆழத்திலுள்ள நடாவவி கிணறு கல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பாலாற்றில்  நடைபெற்ற விழாவிலும் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
 

சித்ரா பௌர்ணமி விழா

 
தமிழகம் முழுவதும் இன்று சித்ரா பௌர்ணமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், வெள்ளியங்கிரி பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து இறைவனை வழிபட்டு வருகின்றனர். அவ்வகையில் காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் நேற்று இரவு திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு காலை பல்வேறு கிராமங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

Nadavavi Kinaru : 15 அடி பூமிக்குள் எழுந்தருளிய பெருமாள்..! நள்ளிரவில் நடந்தேறிய அதிசய திருவிழா.!

" ஸ்ரீ சஞ்சீவிராயர் திருக்கோயிலில் எழுந்தருளி "

 
இதைத் தொடர்ந்து  மாலை ஆறு மணி அளவில் ஐயங்க ஐயங்கார்குளம் ஸ்ரீ சஞ்சீவிராயர் திருக்கோயிலில் எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம் கண்டார். அதன் பின் சிறப்பு மலர் அலங்காரத்தில் கேடய வாகனத்தில், அதே பகுதியில் பூமி மேற்பரப்பில் இருந்து  15 அடி ஆழத்தின் கீழ் அமைந்துள்ள நடாவவி கிணறு கல்மண்டபத்தில் எழுந்தருளி கல்மண்டபத்தினை மூன்று முறை வலம் வந்து சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. பின் பூமியின் மேல்பரப்பிற்கு வந்து பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் தந்த பின் பாலாற்றிக்கு  வேதங்கள் முழங்க வந்தடைந்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Nadavavi Kinaru : 15 அடி பூமிக்குள் எழுந்தருளிய பெருமாள்..! நள்ளிரவில் நடந்தேறிய அதிசய திருவிழா.!

 உலகில் எங்கும் காணக் கிடைக்காத உற்சவம்

பெருமாள் இதுபோன்று பூமிக்கு அடியில் உள்ள  கிணற்றில் சேர்ந்து  பக்தர்களுக்கு அருள் பாலிப்பது  உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.  அதாவது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்  மலை மீது இருப்பதாக ஐதீகம், அதற்கு ஏற்றார் போல்  படி ஏறி சென்று தான், அத்திவரதர்  புகழ்பெற்ற வரதராஜ பெருமாளை தரிசிக்க முடியும்.  இந்த உற்சவத்தின் பொழுது மலை மீது  இருந்து கீழே இறங்கும் வரதராஜ பெருமாள்,  பல்வேறு கிராமங்களுக்கு சென்று  அருள் பாலிப்பார்.  அதன் ஒரு பகுதியாக , பாதாள உலகை குறிக்கும் வகையில்  பூமிக்கு அடியில் சென்று அருள்பாலிப்பது வழக்கம். மலை மீது   இருந்தும்  பூமிக்கு அடியில் இருந்தும்,  தனது பக்தர்களையும், பொது மக்களையும், இந்த உலகையும் பெருமாள் காத்தருள்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.


Nadavavi Kinaru : 15 அடி பூமிக்குள் எழுந்தருளிய பெருமாள்..! நள்ளிரவில் நடந்தேறிய அதிசய திருவிழா.!

"நடவாவி கிணறு என்றால் என்ன ? "

நடவாவி என்றால் படிக்கட்டுள்ள கிணறு என்று அர்த்தம். இந்தக் கிணற்றுக்கு செல்ல தரை மட்டத்தில் இருந்து படிக்கட்டுடன் கூடிய சுரங்கம் போன்ற பாதை உள்ளது. அந்தப் பாதையில் இறங்கிச்சென்றால் கருங்கல்லால் ஆன அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 16 கால் மண்டபத்தைக் காணலாம். இது ஓர் அபூர்வ கட்டிட அமைப்பு என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்ற நிலையில் தரைமட்டத்தில் இருந்து கீழே செல்ல 48 படிகள் உள்ளன.


Nadavavi Kinaru : 15 அடி பூமிக்குள் எழுந்தருளிய பெருமாள்..! நள்ளிரவில் நடந்தேறிய அதிசய திருவிழா.!

இதில் 27 படிகளைக் கடந்தால் அந்த 16 கால் மண்டபத்தை நாம் அடைய முடியும்.   அங்கிருக்கும் கல் மண்டபத்தில் தான் இந்த உற்சவம் நடைபெறும்.  பிரசித்தி பெற்ற உற்சவம் என்பதால் பல ஆயிரக்கணக்கான  பக்தர்கள் பல்வேறு கிராமங்களை சேர்ந்த  பொதுமக்கள் ஆகியோர் இந்த விழாவை பார்ப்பதற்காக   நள்ளிரவிலும் கூடுவது வழக்கம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Embed widget