மேலும் அறிய

நாகை அருகே பர்மா மீனவர்கள் 4 பேர் கைது - மொழி தெரியாததால் சைகையில் விவரம் கூறும் மீனவர்கள்

புயல் சின்னத்தால் கடலில் ஏற்பட்ட  காற்றின் வேகம் காரணமாக மீனவர்கள் தத்தளித்தபடி இந்திய கடல் எல்லை பரப்பிற்குள் வந்தார்களா அல்லது எல்லை தாண்டி மீன் பிடிப்பதற்காக வந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை.

இந்திய கடல்  எல்லைக்குள்  மீன்பிடித்த பர்மா மீனவர்கள் 4 பேர் பாய்மரப்படகுடன்  கைது செய்யப்பட்டனர். அவர்களை இந்திய கடற்படையினர் நாகை கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பின்னர் சென்னை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
 
கடந்த 18 தினங்களுக்கு முன்பு பர்மாவில் இருந்து நான்கு மீனவர்கள் பாய்மரப் படகுடன் மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் நாகப்பட்டினத்திற்கு கிழக்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில், நேற்று மதியம் அவர்கள்  மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது அங்கு ரோந்து பணியில் இருந்து இந்திய கடற்படையினர், இந்திய கடல் எல்லை பரப்பிற்குள்  பாய்மரப்படகு ஒன்று நிற்பதை கண்டு சந்தேகித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பர்மா மீனவர்கள் 4 பேரை  கைது செய்த இந்திய கடற்படையினர் இன்று நாகைக்கு அழைத்து வந்தனர்.

நாகை அருகே பர்மா மீனவர்கள் 4 பேர் கைது - மொழி தெரியாததால் சைகையில் விவரம் கூறும் மீனவர்கள்
 
மியான்மர் (பர்மா) மீனவர்களை கைது செய்து C-436 சார்லி கப்பல் மூலம் அழைத்து வந்த கடலோர காவல்  படை துணை தளபதி கணேஷ் கடலோர காவல் படை காரைக்கால் நிலையத் தளபதி சவுமே சண்டோலா முன்னிலையில் நாகை மாவட்ட கடலோர கடலோர குழும ஆய்வாளர் ரமேஷ் குமாரிடம் ஒப்படைத்தார். நாகையிலிருந்து சுமார் ஒரு கடல் மைல் தூரத்தில் அவர்கள் ஒப்படைத்த நிலையில்  விசைப்படகு மூலம் நாகை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு நாகை கடலோர காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, 'இந்தியாவின் கடல்சார் மண்டலங்கள் (அந்நிய கப்பல்கள் மூலம் மீன்பிடித்தல்)' சட்டத்தின்  (The Maritime Zones of India (Regulation of Fishing by Foreign Vessels) Act வழக்கு பதியப்பட்டு, சென்னை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
புயல் சின்னத்தால் கடலில் ஏற்பட்ட  காற்றின் வேகம் காரணமாக மீனவர்கள் தத்தளித்தபடி இந்திய கடல் எல்லை பரப்பிற்குள் வந்தார்களா அல்லது எல்லை தாண்டி மீன் பிடிப்பதற்காக வந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. கைதான நான்கு மீனவர்களும்  பர்மிஷ் மொழி மட்டுமே பேசுகின்றனர். வேறு மொழி தெரியாததால் தற்பொழுது வரை சைகையில் மட்டுமே அவர்களால் விவரம் கூற முடிகிறது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
Annamalai:
Annamalai: "கெட்அவுட் மோடி? கெட்அவுட் ஸ்டாலின்? - நாளை காலை 6 மணிக்கு இருக்கு.. அண்ணாமலை சவால்
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
Accident Insurance: விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
Embed widget