மேலும் அறிய

எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய சேலம் நகைக்கடையில் இருந்து 20க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல்

தனியார் நகைக்கடையில் இருந்து இருபதிற்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்களும் மற்றும் ஒரு ஹார்ட் டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

சேலத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு தொடர்புடைய நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை நடத்தினர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ.58.23 கோடி கூடுதலாக 3928 சதவீதம் சொத்துக்கள் குவித்ததாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று காலை சென்னை, கோவை, சேலம் உள்பட தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 58 இடங்களில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர்.

எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய சேலம் நகைக்கடையில் இருந்து 20க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல்

சேலம் மாவட்டத்தில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் நகைக்கடை ஒன்றில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை முதலே சோதனையில் ஈடுபட்டு வந்தனர். கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் 7 பேர் கொண்ட குழுவினர் சோதனை ஈடுபட்டனர். மூன்று தளங்கள் உள்ள இத்தனியார் நகைக்கடையில், காலை 10 மணி அளவில் சோதனையானது தொடங்கப்பட்டது. முதலில் தரைதளத்தில் மூன்று மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கடை ஊழியர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இரண்டாம் தளத்திற்கு செல்லும் போது கடை திறக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சோதனை நடைபெறும் பகுதி சேலம் மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி என்பதால் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சோதனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த சோதனைகள் சேலம் தனியார் நகைக்கடையில் இருந்து இருபதிற்கும் மேற்பட்ட முக்கிய ஆவணங்களும் மற்றும் ஒரு ஹார்ட் டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இருப்பினும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய சேலம் நகைக்கடையில் இருந்து 20க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல்

மேலும், சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் வரதராஜ பெருமாள் வீடு, சேலம் மாவட்டம் மேட்டூர் ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் சரவணன் வீடு, ஆத்தூர் பகுதியில் மகாகணபதி நகைக்கடை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அந்த நகை கடையில் இருந்த நகைகளை சேலத்தில் பிரபல நகைக் கடையான ஏ.வி.ஆர் சொர்ண மஹால் வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்தூர் உடையார்பாளையம் ஏ.வி.ஆர் சொர்ணமஹால் நகைக்கடை உள்ளிட்ட பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை மேற்கொண்டு வந்த நிலையில் இந்தவித ஆவணங்களும் கைப்பற்றவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது மனைவி, மகன் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டது. நேற்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இரண்டாம் முறையாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Embed widget