மேலும் அறிய

”முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூபாய் 69 கோடி நன்கொடை” - முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக இதுவரை ரூபாய் 69 கோடி முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக பெறப்பட்டுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது, தமிழகத்தில் நேற்று மட்டும் ஒரேநாளில் 335 நபர்கள் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். 33 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் புதியதாக முதல்-அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற நிதி உதவி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று அரசியல் கட்சியினர், தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் என பல தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.


”முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூபாய் 69 கோடி நன்கொடை”  - முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் ரூபாய் 1 கோடியை நன்கொடையாக அளித்துள்ளனர். மேலும், தங்களது கட்சி எம்.பி.க்கள். எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியத்தையும் நிவாரணமாக வழங்குவதாக அறிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களும் தங்களால் இயன்ற நிதியுதவியை அளித்துள்ளனர்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நேற்று வரையிலும் <a href="https://twitter.com/hashtag/Donate2TNCMPRF?src=hash&amp;ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>#Donate2TNCMPRF</a>-க்கு ரூ.69 கோடி நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.<br><br>நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி!<br><br>ஏற்கனவே அறிவித்தபடி நன்கொடை முழுவதும் <a href="https://twitter.com/hashtag/COVID19?src=hash&amp;ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>#COVID19</a> தடுப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.<br><br>முதற்கட்டமாக உயிர்வளி - மருந்துகளுக்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. <a href="https://t.co/svTf62bPfj" rel='nofollow'>pic.twitter.com/svTf62bPfj</a></p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a href="https://twitter.com/mkstalin/status/1394573384399212546?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>May 18, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “நேற்று வரையில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 69 கோடி நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. நன்கொடையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி. ஏற்கனவே அறிவித்தபடி நன்கொடை முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக உயிர்வளி – மருந்துகளுக்காக ரூபாய் 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என அவர் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அவர்களுக்கான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள், ரெம்டெசிவிர் மருந்துகளின் தேவைகள் அதிகரித்துள்ளது.


”முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூபாய் 69 கோடி நன்கொடை”  - முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

இதை உடனடியாக நிவர்த்தி செய்வதற்காகவே முதல்-அமைச்சர் மக்கள் கொரோனா தடுப்பு நிதி அளிக்க வேண்டுகோள் விடுத்திருந்தார். கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, கடந்த 7-ஆம் தேதி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவர் பொறுப்பு ஏற்றுக்கொண்ட 10 நாட்களில் ரூபாய் 69 கோடி நன்கொடையாக கிடைக்கப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பொது நிவாரண நிதிக்கு மேலும் பலரும் தொடர்ந்து நன்கொடை அளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
Seeman About Kaliammal: காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம்   ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...”  எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம் ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...” எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Maha Shivratri 2025: ஓம் சிவ ஓம்.. இன்று மகா சிவராத்திரி! சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்!
Maha Shivratri 2025: ஓம் சிவ ஓம்.. இன்று மகா சிவராத்திரி! சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
Seeman About Kaliammal: காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம்   ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...”  எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம் ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...” எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Maha Shivratri 2025: ஓம் சிவ ஓம்.. இன்று மகா சிவராத்திரி! சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்!
Maha Shivratri 2025: ஓம் சிவ ஓம்.. இன்று மகா சிவராத்திரி! சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்!
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
Mayiladuthurai Power Shutdown (26.02.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இங்கெல்லாம் மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க?
"ரூ 5,000 கொடுக்கிறோம்.. நம்பி ஓட்டு போடுங்க" முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அதிரடி!
Embed widget