மேலும் அறிய

Thiruvannamalai sipcot: சிப்காட் விவகாரத்தில் விவசாயிகளை திட்டமிட்டு தூண்டி விடுகின்றனர் - அமைச்சர் எ.வ.வேலு குற்றசாட்டு

முதலமைச்சரை சந்தித்து குண்டர் சட்டத்தில் இருக்கும் 7 பேருக்கு விலக்கு அளித்து விடுதலை செய்ய கோரிக்கை வைக்க உள்ளேன் என அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

Thiruvannamalai sipcot: திருவண்ணாமலை சிப்காட் விவகாரத்தில் கைதான விவசாயிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கு அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் 3-வது திட்ட விரிவாக்க பணிக்காக மேல்மா உட்பட 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த ஜூலை மாதம் முதல் 124 நாட்களுக்கு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களில் 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிமைகக்காக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் விவசாயிகள் மீதான நடவடிக்கை குறித்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அதில், ”விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்து வைக்க வேண்டும் என்ற உள்நோக்கம் எதுவும் இல்லை. திருவண்ணாமலை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டதில் இருந்து அதில் ஒரு தொழிற்சாலை கூட கிடையாது. மாவட்டம் முழுவதும் விவசாயத்தை அடிப்படையாக கொண்டது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தொழிற்சாலை வந்தால் தான் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்ததால், எம்.எல்.ஏ. அமைச்சர்கள் அரசுக்கு முறையிட்டோம். அப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு பகுதியில் சிப்காட் அமைக்க திட்டமிட்டு 3 கட்டங்களாக பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

அதில் முதல் கட்டமாக 622 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அதில் 13 தொழிற்சாலைகள் வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டது. இதில் செய்யாறு, ஆரணி, வந்தவாசி பகுதியை சேர்ந்த ஏறத்தாழ 30,000 பேர் பணியில் உள்ளனர். 2வது கட்டமாக 1860 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில் 55 தொழிற்சாலைகள் நிறுவப்பட உள்ளது. அதன் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக உள்ளது. மேலும் வேலை வாய்ப்பை அதிகரிக்க 3வது கட்ட நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
 
இதில் சம்பந்தப்பட்ட 9 கிராமங்களுக்கு அரசின் சார்பாக பல்வேறு முறை விளக்க கூட்டம் நடத்தி, கருத்து கேட்கப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து  ஆக்கிரமிக்கப்பட்டத்தை விட இரண்டரை மடங்கு நிலத்தை அரசு வழங்குகிறது. விவசாயிகளும் முக்கியம். அதேநேரம் வேலைவாய்ப்பு உருவாக்க நிலங்களும் தேவைப்படுகிறது. தொழிற்சாலைகளை உருவாக்கினால் தான் படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும். தொழிற்சாலையை கடலில் கட்டமுடியுமா..? இல்லை வானத்தில் கட்ட முடியுமா..? தொழிற்சாலை கட்ட நாம் தான் நிலத்தை கொடுக்க வேண்டும். 
 
ஆனால், ஒருசிலர் மட்டும் தொடர்ந்து 100 நாட்களாக அப்பகுதி மக்களை தூண்டி விட்டு அரசுக்கு எதிராக போராட வைக்கின்றனர். நாங்களும் தான் விவசாயிகள். அதன் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியாதா. மாவட்டம் முழுவதும் விவசாய நிலமாக தான் உள்ளது. அதில் ஒரு 5 சதவீத பகுதியை மட்டுமே தொழிற்சாலைக்காக எடுக்கிறோம். விவசாயம் தேவைப்படுவது போல் தொழிற்சாலைகளும் அவசியம் தானே. போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் குடும்பத்தினரே சிப்காட் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கின்றனர். திட்டமிட்டே திமுக அரசு செயல்பட கூடாது என்பதற்காகவும், இளைஞர்களுக்கு வேலை கிடைக்க கூடாது என்பதற்காகவே தூண்டி விட்டு போராட்டம் நடத்தப்படுகிறது. 
 
7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதை பத்திரிகையில் படித்தேன். கைதான 7 பேரின் குடும்பத்தினர் அளித்த மனுவை பெற்றுள்ளேன். முதலமைச்சரை சந்தித்து குண்டர் சட்டத்தில் இருக்கும் 7 பேருக்கு விலக்கு அளித்து விடுதலை செய்ய கோரிக்கை வைக்க உள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். 

தலைப்பு செய்திகள்

TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
மூத்த மருத்துவர் டி.வி.சாத்தப்பன் மீது அவதூறு போஸ்டர்கள்: இந்திய மருத்துவச்சங்கம் கடும் கண்டனம்
மூத்த மருத்துவர் டி.வி.சாத்தப்பன் மீது அவதூறு போஸ்டர்கள்: இந்திய மருத்துவச்சங்கம் கடும் கண்டனம்
Theni power cut: தேனியில் நாளை (29-07-2026 ) எங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு - லிஸ்ட் வெளியீடு
தேனியில் நாளை (29-07-2026 ) எங்கெல்லாம் மின்தடை அறிவிப்பு - லிஸ்ட் வெளியீடு
வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 3 பேர் பணியிட மாற்றம்: மாவட்ட கலெக்டர் அதிரடி
வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 3 பேர் பணியிட மாற்றம்: மாவட்ட கலெக்டர் அதிரடி

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Avore EX Electric Bike: ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
ஒரே சார்ஜில் 260 கிமீ ரேஞ்ச்; ஓலா, ரிவோல்ட்-க்கு ரிவிட்.! Avore EX EV பைக் அறிமுகம்; விலை இவ்ளோ தானா.?
US New Immigration Bill: அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
அமெரிக்காவில் ‘க்ரீன் கார்டுக்கு க்ரீன் சிக்னல்‘; லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு குட் நியூஸ்; புதிய மசோதா
Iran Vs Trump: ''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
''நாங்க பேசனும்னு சொன்னோமா.? அவர் தானாவே போர நிறுத்திட்டார்''; ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்
Embed widget