மேலும் அறிய

கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு

காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு, தண்ணீர் வரத்து  குறைந்தது. மாயனூர் கதவணைக்கு காலை வினாடிக்கு 17,906 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 16,731 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது.

மாயனூர் கதவனைனக்கு தண்ணீர் வரத்து சரிவு.

காவிரி ஆற்றில் மாயனூர் கதவனைக்கு, தண்ணீர் வரத்து  குறைந்தது. காவிரி ஆற்றில் கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு காலை வினாடிக்கு 17,906 கன அடி தண்ணீர் வந்தது.  காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 16,731 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. காவிரி ஆற்றில் சம்பா சாகுபடி பணிக்காக 15,931 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மூன்று பாசன வாய்க்காலில் 800 கன அடி தண்ணீர்  திறக்கப்பட்டுள்ளது.



கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு

 

அமராவதி அணை நிலவரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை 1,191 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து அமராவதி ஆற்றில் வினாடிக்கு 1,258 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 89.41 அடியாக இருந்தது. கரூர் பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு காலை வினாடிக்கு 1477 கான அடி தண்ணீர் வந்தது.

பொன்னணியாறு அணை

கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைக்கு, காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 27.87 அடியாக இருந்தது.

 


கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு

ஆத்துப்பாளையம் அணை

கா. பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 42 கன அடி வீதம் தண்ணீர் வந்தது. மேலும், 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.24 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 42 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

நங்காஞ்சிஅணை நிலவரம்

திண்டுக்கல் மாவட்டம் வடகாடு மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் 39.37 அடி உயரம் கொண்ட, நங்கஞ்சி அணை நிரம்பியுள்ளது.நங்காஞ்சி ஆற்றிலிருந்து இரண்டு பாசன கிளை வாய்க்காலில் தலா 10 கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு வினாடிக்கு, 20 கன அடி தண்ணீர் வந்தது.

மழை நிலவரம் 

கரூர் மாவட்டத்தில் காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தோகை மலையில் மட்டும் ஒரு மில்லி மீட்டர் மழை பெய்தது.

வரும் கோடையில் வறட்சி ஏற்படாமல் இருக்க கடந்த ஆண்டைப் போல அதிக மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்.

வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ஆண்டு சராசரியை விட இந்த ஆண்டும் கடந்த ஆண்டை போல அதிக மழையை மாவட்டம் பெற வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மலை அளவு 652.20 ஆக உள்ளது. இந்த மலையளவை ஜனவரி, பிப்ரவரி ஆகிய பணிக்காலங்களில் 13.08 மில்லி மீட்டரும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களில் கோடை காலத்தில் பெய்யும் 125.08 மில்லி மீட்டரும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய நான்கு மாதங்களில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் 153.15 மில்லி மீட்டரும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் என மூன்று மாதங்களில் வடகிழக்கு பருவமழையில் 360.89 மில்லி மீட்டரும் என நான்கு பருவங்களில் ஆண்டு சராசரி மழையை கரூர் மாவட்டம் பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 11 ஆண்டுகளில் 2011, 2015, 2017, 2020, மற்றும் 2021 ஆண்டுகளில் சராசரியை விட அதிக அளவுமழையை கரூர் மாவட்டம் பெற்றுள்ளது.

 


கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு

மற்ற ஆண்டுகளில் மழையின் அளவு குறைந்து. மாவட்டம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு வறட்சி போன்றவற்றை சந்தித்து அந்த காலகட்டங்களில் விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பினர்களும் மிகுந்த சிரமத்தை அனுபவித்து விட்டனர். குறிப்பாக 2016 ஆம் ஆண்டில் அந்த ஆண்டு முழுவதும் 350.52 மில்லி மீட்டர் மழையை தான் கரூர் மாவட்டம் பெற்றது. அந்த ஆண்டு கரூர் மாவட்டம் கடுமையான வறட்சியை சந்தித்தது. தற்போதைய நிலையில் வடகிழக்கு பருவ மழையை தவிர்த்து பனிக்காலம், கோடை காலம் தென்மேற்கு பருவமழை ஆகிய மூன்று சீசன்ங்கள் வரை கரூர் மாவட்டம், 291.31 மில்லி மீட்டர்  மழையை தான் பெற்றுள்ளது. 

ஆண்டு சராசரியை மழையை விட மேலும் 360.89 மில்லிமீட்டர் மலையை நாம் பெற வேண்டும் ஆனால் கடந்த நவம்பர் மாதத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்தது. தற்போது புயல் சின்னம் காரணமாக கரூர் மாவட்டம் முழுவதும் லேசான அளவில் தான் மழை பெய்தது. டிசம்பரிலும் மாவட்டம் குறிப்பிடத்தக்க அளவுமழை யை பெறவில்லை. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் இருந்து குளித்தலை வரை ஆற்றுப் பாசனம் நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளில் விவசாயம் நடைபெற வேண்டும் என்றால்மழை அதிக அளவு பெய்ய வேண்டும். என்ற நிலை உள்ளது. இதன் காரணமாகத்தான் ஆண்டுதோறும் கரூர் மாவட்டம் ஆண்டு சராசரி மழையை தாண்டியும் பெய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

எனவே, இனிவரும் நாட்களில்கடந்த ஆண்டை விட கரூர் மாவட்டத்திற்கு அதிக அளவு மழை பெய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget