மேலும் அறிய

மதுரை மக்களே தலைவலி குறையப்போகிறது.. புதிய ஆதார் சேவை மையம் திறப்பு, காத்திருக்கும் நவீன வசதிகள்!

தமிழகத்தில் தற்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இத்தகைய மையங்களை உள்ளன என்றும், அந்த எண்ணிக்கையை 2026 செப்டம்பர் மாதத்திற்குள் 30 மாவட்ட மையங்களாக உயர்த்த UIDAI திட்டமிட்டுள்ளது.

சென்னையில் மற்றுமொரு புதிய மையம் திறக்கப்பட உள்ளது. இது அரசின் டிஜிட்டல் சேவைகளை பொதுமக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்கும் முயற்சியின் முக்கிய மைல்கல்லாகும் என்றார்.

மதுரையில் புதிய ஆதார் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது
 
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மதுரை கே.கே. நகரில் ஒரு புதிய ஆதார் சேவை மையத்தை இன்று (26 டிசம்பர் 2025) திறந்துள்ளது. இந்த புதிய வசதியை மதுரை மாவட்ட துணை ஆட்சியர் M. காளீஸ்வரி திறந்து வைத்தார். பெங்களூரிலுள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் மண்டல அலுவலகத்தின் இயக்குநர் பவன் குமார் பஹ்வா தலைமையில் இந்தத் திறப்பு விழா நடைபெற்றது. புதிய ஆதார் சேவை மையம், "மாடல்-பி" (Model-B) தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் எட்டு கணினி முனையங்கள் செயல்படுவதால், தினமும் சுமார் 400 முதல் 500 பேர் வரை தங்களது ஆதார் தொடர்பான பணிகளை தடையின்றி மேற்கொள்ள முடியும். இந்த மையத்தில் அனைத்து வயதினருக்கும் புதிய ஆதார் பதிவு செய்தல், புகைப்படம் மற்றும் கைரேகை போன்ற பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பித்தல், மற்றும் பெயர், முகவரி, கைபேசி எண் போன்ற திருத்தங்களைச் செய்யும் வசதிகள் வழங்கப்படுகின்றன.
 
கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல்
 
பொதுமக்களின் வசதிக்காக இந்த மையம் முழுமையாக குளிரூட்டப்பட்டு, நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தனித்தனி கவுண்டர்கள் இங்கு செயல்படுகின்றன. மேலும், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து செல்ல சக்கர நாற்காலி வசதியும் செய்யப்பட்டுள்ளது. புதிய ஆதார் பதிவு மற்றும் 5 மற்றும் 15 வயதுடைய குழந்தைகளுக்கான கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் சேவைகள் எப்போதும் போல முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படும்.
 
புதிய மையம் திறக்கப்பட உள்ளது
 
இந்தத் திறப்பு விழாவின் போது செய்தியாளர்களிடம் பேசிய மண்டல இயக்குநர் பவன் குமார் பஹ்வா, நாடு முழுவதும் 480-க்கும் மேற்பட்ட ஆதார் சேவை மையங்களை நிறுவும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் தற்போது மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இத்தகைய மையங்களை உள்ளன என்றும், அந்த எண்ணிக்கையை 2026 செப்டம்பர் மாதத்திற்குள் 30 மாவட்ட மையங்களாக உயர்த்த UIDAI திட்டமிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வரும் 2026 ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் மற்றுமொரு புதிய மையம் திறக்கப்பட உள்ளது. இது அரசின் டிஜிட்டல் சேவைகளை பொதுமக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்கும் முயற்சியின் முக்கிய மைல்கல்லாகும் என்றார்.
 
 

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget