மேலும் அறிய

சுற்றுலா சென்ற இடத்தில் ஆயுத பயிற்சி என பதிவிட்ட நபர்: சிறுமலை வழக்கு பெருமலையாய் வெடித்து நீதிபெற்ற தருணம்!

வாடிப்பட்டி போலீசார் மனுதாரர் நகைச்சுவைக்காக பதிவிட்டுள்ளார் என நினைக்கவில்லை. அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக கருதி, அவர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். 

‛‛நாம் ஒவ்வொருவரும் நகைச்சுவை உணர்வுடன் இருக்க பழக வேண்டும். அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகவும் நகைச்சுவை உணர்வை கொண்டு வரும் காலம்நெருங்கிவிட்டது என மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

சுற்றுலா சென்ற இடத்தில் ஆயுத பயிற்சி என பதிவிட்ட நபர்: சிறுமலை வழக்கு பெருமலையாய் வெடித்து நீதிபெற்ற தருணம்!
 
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதிவாணன் என்பவர் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"நான் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டதாக என் மீது மதுரை வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மனுதாரர் தனது மகள், மருமகனுடன் கடந்த செப்டம்பர் மாதம் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையை சுற்றிப்பார்க்கச் சென்றுள்ளார். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டு, அதற்கு ‘துப்பாக்கி பயிற்சிக்காக சிறுமலை பயணம்’ என நகைச்சுவையாக தலைப்பை எழுதியுள்ளார். 
 
இதை பார்த்த வாடிப்பட்டி போலீசார் மனுதாரர் நகைச்சுவைக்காக பதிவிட்டுள்ளார் என நினைக்கவில்லை. 
அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக கருதி, அவர் மீது கூட்டுச்சதி, குற்றச்செயல்களில் ஈடுபட முயற்சி செய்வது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர். அதோடு விடவில்லை. அவரை கைது செய்து சிறையில் அடைப்பதற்காக, வாடிப்பட்டி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். 
 
ஆனால் அங்கிருந்த மாஜிஸ்திரேட்டு அருண், புத்தி கூர்மையுடன் செயல்பட்டு அவரை நீதிமன்ற காவலில் அடைக்கும்படி உத்தரவிட முடியாது என்று மறுத்துவிடுகிறார். இவரைப்போல தமிழகத்தில் உள்ள மற்ற மாஜிஸ்திரேட்டுகளும் செயல்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இதுபோன்ற சம்பவங்களில் நீதிமன்ற காவலில் வைக்கும்படி கேட்கவே முடியாது. 
 
ஒவ்வொரு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்ற காவலில் வைப்பதற்கு காவல்துறையினரும், வழக்கறிஞர்களும் முயற்சி செய்வார்கள். ஆனால் கைதானவர்களை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடும் நடவடிக்கை சரிதானா என மாஜிஸ்திரேட்டுகள் தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். எனவே வாடிப்பட்டி மாஜிஸ்திரேட் அருணின் நியாயமான நடவடிக்கைக்கு நன்றி. 

சுற்றுலா சென்ற இடத்தில் ஆயுத பயிற்சி என பதிவிட்ட நபர்: சிறுமலை வழக்கு பெருமலையாய் வெடித்து நீதிபெற்ற தருணம்!
 
இதன்மூலம் சிறையில் அடைக்கப்படுவதில் இருந்து மனுதாரர் தப்பியுள்ளார்.  மனுதாரரிடம் இருந்து காவல்துறையினர் எந்த ஒரு ஆயுதத்தையும் கைப்பற்றவில்லை. போதிய ஆதாரங்கள் இல்லையென்பதால் அவர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்கிறேன். 
 
நாம் ஒவ்வொருவரும் நகைச்சுவை உணர்வுடன் இருக்க பழக வேண்டும். அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகவும் நகைச்சுவை உணர்வை கொண்டு வரும் காலம் நெருங்கிவிட்டது.
என உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: ஒமிக்ரான் வைரஸ் - வருகிறதா ஊரடங்கு.... மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சொல்வது என்ன?

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்யும்? - வானிலை கொடுத்த வார்னிங்
தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று பலத்த காற்றுடன் மழை பெய்யும்? - வானிலை கொடுத்த வார்னிங்
தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC தான்! - சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்
தமிழ்நாட்டில் மனசாட்சியே இல்லாத நிறுவனம் NLC தான்! - சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி ஆவேசம்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
World Record: முகம் முழுக்க தேனீக்கள்.. 5 மணி நேரம் அசையாமல் இருந்த நபர்.. உலக சாதனை!
World Record: முகம் முழுக்க தேனீக்கள்.. 5 மணி நேரம் அசையாமல் இருந்த நபர்.. உலக சாதனை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
Embed widget