மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு புதிய திருப்பம் - காவல்துறை வாகனத்தில் போலி நம்பர் பிளேட் கண்டுபிடிப்பு !
அஜித் குமார் கொலை வழக்கில் தொடர்புடைய போலீஸ் வாகனம் இரண்டு பதிவெண்களில் பயன்படுத்தி வந்தது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.

அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்று காவல்துறை வாகனத்தின் பதிவெண் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் 2 வாகன பதிவெண்கள் கண்டுபிடிப்பு.
தொடர்ந்து சி.பி.ஐ அதிகாரிகள் ஐந்தாவது நாளாக திருப்புவனம் மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அஜித் குமார் மற்றும் அவரது சகோதரர் நவீன் குமார் உள்ளிட்ட நான்கு பேரை அழைத்து சென்று தாக்கிய இடங்களில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை கோயில் செயல் அலுவலர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட போலீசார் பயன்படுத்திய டெம்போ வேனை சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து ஓட்டுநர் ராமச்சந்திரனிடம் விசாரணை செய்தனர்.
போலி நம்பர் பிளேட்கள் கண்டுபிடிப்பு
அப்போது அந்த போலீஸ் வாகனம் TN 01G 0491 - TN 63G 0491 சென்னை மற்றும் சிவகங்கை என இரண்டு மாவட்ட பதிவெண்களுடன் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் டெம்போவின் உள்ளே தடயங்களை சேகரிக்கும் போது மதுபானம், சீட்டு விளையாட்டு கட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் போலீஸ் வாகனத்தில் இருந்தது சிபிஐ அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கொலையை செய்து விட்டு குற்றத்தை மறைக்க அனைத்து சட்டவிரோத செயல்களில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகளை மட்டுமில்லாமல் பொதுமக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.





















