மேலும் அறிய

Schools Reopening | ஊரடங்கு 2 வாரம் நீட்டிப்பு : செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்க உத்தேசம், வழிபாட்டு தலங்களுக்கு தடை

தமிழ்நாட்டில் அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. பல்வேறு கட்டங்களாக அமல்படுத்தப்பட்டு வந்த இந்த ஊரடங்கு தற்போது ஆகஸ்டு 9-ந் தேதி வரை தற்போது அமலில் உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கை வரும் மேலும் இரண்டு வாரத்திற்கு அதாவது 23-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

“ தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலின் தன்மை அதன் தாக்கம் குறித்து முதல்வர் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்குழுவினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வாரியான நோய்ப்பரவல், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயலாக்கம் குறித்த மருத்துவ நிபுணர் குழுவினரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 9-ந் தேதி காலை 6 மணியுடன் முடிவடைய உள்ள நிலையில், மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் நோய்த் தொற்று பரவல் அண்டை மாநிலங்களில் நோயின் தாக்கம் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அரசு உயர் அலுவலர்கள் மற்று் காவல்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


Schools Reopening | ஊரடங்கு 2 வாரம் நீட்டிப்பு : செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்க உத்தேசம், வழிபாட்டு தலங்களுக்கு தடை

அதனடிப்படையில், நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் அதிகளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது. இக்கட்டுப்பாடுகளுடன் வரும் 23-ந் தேதி காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.

கடந்த வாரம் கூட்டம் அதிகமாக கூடக்கூடிய நிகழ்வுகள் மற்றும் சந்தை பகுதிகளில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் / காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் நோய்த் தொற்று பரவல் கட்டுக்குள் இருந்துவருகிறது. இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.  மேலும், இணையம் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலான பிள்ளைகளக்கு கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.


Schools Reopening | ஊரடங்கு 2 வாரம் நீட்டிப்பு : செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்க உத்தேசம், வழிபாட்டு தலங்களுக்கு தடை

அனைத்து தரப்பு கருத்துக்களையும் ஆராய்ந்து அதனடிப்படையில் வரும் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்புகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆகஸ்ட் 16-ந் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதுதொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வௌியிடும். அங்கு  பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மருத்துவ பணியாளர்கள் என்ற அடிப்படையில் ஏற்கனவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

 

  • கடைகளின் நுழைவுவாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தம் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
  • இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.  
  • கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.


Schools Reopening | ஊரடங்கு 2 வாரம் நீட்டிப்பு : செப்டம்பர் முதல் பள்ளிகள் திறக்க உத்தேசம், வழிபாட்டு தலங்களுக்கு தடை

  • கடைகளில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்க கூடாது,
  • கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்து செயல்படும் வணிக/ இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பின் பொறுப்பாளர்கள் தொடர்ந்து பொதுமக்களிடையே ஏற்படுத்தி பெருந்தொற்று நோய் பரவலை தடுத்திட முன்மாதிரி நடவடிக்கைகள் மேற்கொள்மாறு கேட்டுக்கொள்கிறேன். கொரோனா நோய் பரவல் தடுப்பிற்கான உறுதிமொழிினை ஒவ்வொருவரும் எடுத்துக்கொண்டு சொல்லிலும், செயலிலும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
Breaking News LIVE 27th Sep 2024: பிரதமர் மோடியை இன்று நேரில் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்
Breaking News LIVE 27th Sep 2024: பிரதமர் மோடியை இன்று நேரில் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்
IND Vs Ban 2nd Test: வங்கதேசத்துடன் இன்று 2வது டெஸ்ட் போட்டி - தொடரை கைப்பற்றுமா இந்தியா? கோலி, ரோகித் ஜொலிப்பார்களா?
IND Vs Ban 2nd Test: வங்கதேசத்துடன் இன்று 2வது டெஸ்ட் போட்டி - தொடரை கைப்பற்றுமா இந்தியா? கோலி, ரோகித் ஜொலிப்பார்களா?
Rasi Palan Today, Sept 27: மேஷத்துக்கு நிம்மதியான நாள், ரிஷபத்துக்கு எதிர்ப்புகள் மறையும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மேஷத்துக்கு நிம்மதியான நாள், ரிஷபத்துக்கு எதிர்ப்புகள் மறையும்.. உங்கள் ராசிக்கான பலன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
Breaking News LIVE 27th Sep 2024: பிரதமர் மோடியை இன்று நேரில் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்
Breaking News LIVE 27th Sep 2024: பிரதமர் மோடியை இன்று நேரில் சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்
IND Vs Ban 2nd Test: வங்கதேசத்துடன் இன்று 2வது டெஸ்ட் போட்டி - தொடரை கைப்பற்றுமா இந்தியா? கோலி, ரோகித் ஜொலிப்பார்களா?
IND Vs Ban 2nd Test: வங்கதேசத்துடன் இன்று 2வது டெஸ்ட் போட்டி - தொடரை கைப்பற்றுமா இந்தியா? கோலி, ரோகித் ஜொலிப்பார்களா?
Rasi Palan Today, Sept 27: மேஷத்துக்கு நிம்மதியான நாள், ரிஷபத்துக்கு எதிர்ப்புகள் மறையும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மேஷத்துக்கு நிம்மதியான நாள், ரிஷபத்துக்கு எதிர்ப்புகள் மறையும்.. உங்கள் ராசிக்கான பலன்
தமிழகத்தில் இன்று ( 27.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்: எங்கெல்லாம்?
தமிழகத்தில் இன்று ( 27.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்: எங்கெல்லாம்?
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Embed widget