மேலும் அறிய

பஞ்சர் சொல்யூசன்.. இருமல் மருந்து.. ஊரடங்கில் மது கிடைக்காமல் வழிமாறும் மதுக்குடிப்போர்!

ஊரடங்கு உத்தரவால் மதுபாட்டில்கள் கிடைக்காமல் திண்டாடும் மதுக்குடிப்போர், எதைக் குடித்தால் போதை ஏறும் என விபரீத யுக்திகளை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் மதுபாட்டில்கள் கிடைக்காமல் அல்லாடும் மதுக்குடிப்போர், எதைக் குடித்தால் போதை ஏறும் என விபரீத யுக்திகளை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

பஞ்சர் சொல்யூசன்.. இருமல் மருந்து.. ஊரடங்கில் மது கிடைக்காமல் வழிமாறும் மதுக்குடிப்போர்!
இந்தியாவிலேயே மது குடிப்போர் அதிகம் உள்ள மாநிலமாகி விட்டது தமிழகம். தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் கடை என மது விற்பனை அமோகமாகி, சாமான்யர்களின் சம்பாத்தியத்தில் பெரும் பகுதி டாஸ்மாக் கடைகளின் கஜானாவை நிரப்பி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வீசுகிறது. இதனால் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள நிலையில். ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரியில் டாஸ்மாக் கடைகளும் மூடுவிழா கண்டுவிட்டன.

பஞ்சர் சொல்யூசன்.. இருமல் மருந்து.. ஊரடங்கில் மது கிடைக்காமல் வழிமாறும் மதுக்குடிப்போர்!

கடைகள் மூடப்பட்டுள்ளதால் குடிமகன்கள் மது கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். தினமும் குடித்தே பழக்கப்பட்ட மதுக்குடிப்போர்  இப்போது திண்டாட்டத்தில் உள்ளனர். ஊரடங்கால் இப்போது வேலை இல்லாததால் மது எங்கே கிடைக்கும் என வீதி வீதியாக தேடி அலைகின்றனர். இதைப் பயன்படுத்தி மதுபாட்டில்களை பாட்டில்களை ஏற்கனவே வாங்கி பதுக்கி வைத்திருந்த சிலர், தற்போது கள்ளச்சந்தையில் இரு மடங்கு விலை கொடுத்து கடந்த சில நாட்களாக குடித்து வந்தனர். சில இடங்களில் டாஸ்மாக் கடைகளை உடைத்து பாட்டில்களை அள்ளிச் சென்ற சம்பவங்களும் அரங்கேறின. இப்போது, அவ்வாறு பதுக்கி வைத்திருந்த டாஸ்மாக் மதுபாட்டில்கள் தீர்ந்து போனதால் போதைக்கு மாற்றாக சில விபரீத வழிமுறைகளை சிலர் கையாள ஆரம்பித்துள்ளனர்

பஞ்சர் சொல்யூசன்.. இருமல் மருந்து.. ஊரடங்கில் மது கிடைக்காமல் வழிமாறும் மதுக்குடிப்போர்!

போதை மாத்திரை, தூக்க மாத்திரை, இருமலுக்கு பயன்படுத்தும் டானிக் போன்றவற்றை வாங்க ஏராளமானோர் மருந்துக் கடைகளுக்கு படையெடுத்து வருவதால், சமாளிக்க முடியாமல் கடைக்காரர்கள் திண்டாடுவதாக தகவல்கள் வெளிவருகின்றன. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் இதனால் சில இடங்களில் கள்ள சந்தையில் 180 மில்லி அளவு கொண்ட125 ரூபாய் மது பாட்டிலை 600 ரூபாய் வரை வாங்கி குடித்து வந்த மதுப்பிரியர்கள் பின்னர் மது பாட்டில் விலை சற்று கூடுதலாக 800 வரை விலை போகிறது என தெரியவந்ததை அடுத்து வாங்கி குடிக்க பணம் இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று சில  இருமல் மருந்தை 100 ரூபாய் விலை நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 பாட்டில் வரை வாங்கி குடித்து வருகின்றனர். இதனால் மருந்து கடையில் கூட்டம். வேறு சில குடிமகன்களோ சைக்கிள் டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் சொல்யூசன் திரவத்தை தீயில் எரித்து அதன் புகையை முகர்ந்து போதையேற்றும் விபரீதங்களும் அரங்கேறி வருகின்றன. ஒரு பக்கம் தமிழகத்தில் 20 ஆண்டுகளாக காணாமல் போயிருந்த கள்ளச்சாராயமும் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளதும் வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.

பஞ்சர் சொல்யூசன்.. இருமல் மருந்து.. ஊரடங்கில் மது கிடைக்காமல் வழிமாறும் மதுக்குடிப்போர்!

மேலும் புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு கள்ள விற்பனைக்கு எடுத்து வரும் போலி மதுபாட்டில்கள், எரிசாராயம் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். போலீசாரிடம் சிக்காமல் இருக்க மலை பகுதி, கரும்பு, வாழை ஆகிய தோட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர். இந்த சூழலில் கலப்படம் செய்யப்பட்ட மது மற்றும் சாராயம் போன்றவற்றை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர், மேலும் இந்நிலையில் கஞ்சா விற்பனையில் சற்று தலைதூக்கியுள்ளது, கள்ளத்தனமாக கஞ்சா, எரிசாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்களை களையெடுக்கும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். போதைக்காக ஆசைப்பட்டு கண்டதையும் குடித்து உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது என்று காவல்துறை அறிவுறுத்தி வருகிறது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget