மேலும் அறிய

வாழ்வாதாரம் பாதிப்பு...கரூரின் மினி பேருந்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்

கரூர் மாநகரப் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் திருச்சி பகுதியில் இருந்தும் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிகள் ரயில் மற்றும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

கரூர் ரயில் நிலையத்தில் அனுமதி இன்றி செயல்படுவதாக மினி பேருந்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுனரால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாநகரப் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் திருச்சி பகுதியில் இருந்தும் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பயணிகள் ரயில் மற்றும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ ஓட்டி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.

 


வாழ்வாதாரம் பாதிப்பு...கரூரின் மினி பேருந்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்

இந்த நிலையில் ரயில் நிலங்களில் ரயில் வரும் நேரத்தில் மினி பேருந்துகளை நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றி செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது, அதே நேரத்தில் அரசு நகர பேருந்துகளும் இயக்கி வருவதால் ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

பலமுறை மினி பேருந்து ஓட்டுனர்களை செயல்பாட்டை கண்டித்து புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறிய ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று காலை மினி  பேருந்து முற்றுகையிட்டு ஆட்டோவை முன்பு நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டோ ஓட்டுநர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. மினி பேருந்து உரிய அனுமதியின்றி இயக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு வைக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்தி அனுமதியின்றி இயக்கப்படும். 

 


வாழ்வாதாரம் பாதிப்பு...கரூரின் மினி பேருந்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்

 

மினி பேருந்துகளை தடை செய்து ஆட்டோ ஓட்டுநர்களான எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் திறக்க வேண்டும்.


மேலப்பாளையம் கோயம்பள்ளி இடையே அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று வேலாயுதம் பாளையத்தில் நடந்த மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூர் செல்லும் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மோகன் குமார் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் லட்சுமி காந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் ரத்தினம், மாவட்ட துணைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முத்துசாமி வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் நாட்ராயன் கலந்து கொண்டு மாநில குழு முடிவுகள் பற்றி எடுத்துக் கூறினார். அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து மாநில அளவிலான உயர் அதிகாரிகளை கொண்டு விசாரணை செய்திட வேண்டும் கல்லூரி கல்வி பேராசிரியர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என உடற்கல்வி இயக்குனரை கேட்டுக்கொள்கிறது. மேலப்பாளையம் கோயம்பள்ளி இடையே அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாடத்தை உடனடியாக திறந்து மக்கள் பயன்பாட்டில் கொண்டு வர வேண்டும்.

டிஎன்பிஎல் சிமென்ட் ஆலை முதல் மூர்த்தி பாளையம் வரை செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை உட னடியாக சரி செய்ய வேண்டும் என டிஎன்பிஎல் நிர்வாகம் மற்றும் புகலூர் நகராட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறது. கரூர் மாநகராட்சி மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என கூட்டம் கேட்டுக் கொள்கிறது. வேலுச்சாமிபுரம், இந்திரா நகர், வழியாக செல்லும் சாலை மக்கள் நடக்கவே முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் குப்புசாமி சின்னகாளிமுத்து செல்வம் உள்ளிட்ட நிர்வாக குழு மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

தலைப்பு செய்திகள்

முகநூல் காதலால் விபரீதம் ; துபாய் வாலிபர் தற்கொலை ; குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி
முகநூல் காதலால் விபரீதம் ; துபாய் வாலிபர் தற்கொலை ; குமரி மாவட்டத்தில் அதிர்ச்சி
மறைக்கப்பட்ட வரிவிதிப்பு ரகசியம்... ஆஹா, சிவகங்கையில் 3ம் வீரபாண்டியன் தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு !
மறைக்கப்பட்ட வரிவிதிப்பு ரகசியம்... ஆஹா, சிவகங்கையில் 3ம் வீரபாண்டியன் தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு !
Puducherry power cut : பொதுமக்களே உஷார்..! புதுவையில் நாளை பல இடங்களில் மின்தடை: பகுதிகள் விவரம் உள்ளே!
Puducherry power cut : பொதுமக்களே உஷார்..! புதுவையில் நாளை பல இடங்களில் மின்தடை: பகுதிகள் விவரம் உள்ளே!
இது என்ன புது ட்ரெண்ட்? - முதல்வர் விஜய் படம் மாட்டியதால் நெல்லை மேயர் செய்த விநோத செயல் - வைரலாகும் புகைப்படம்
இது என்ன புது ட்ரெண்ட்? - முதல்வர் விஜய் படம் மாட்டியதால் நெல்லை மேயர் செய்த விநோத செயல் - வைரலாகும் புகைப்படம்

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Longest Range EVs: ஒரே சார்ஜில் அதிக தூரம் செல்லும் டாப் EV கார்கள் எவை.? வாங்குறதுக்கு முன்னாடி இந்த லிஸ்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் அதிக தூரம் செல்லும் டாப் EV கார்கள் எவை.? வாங்குறதுக்கு முன்னாடி இந்த லிஸ்ட்ட பாருங்க
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
சென்னை மக்களே.! ஜூன் 9-ம் தேதி(09.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? பாருங்க
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
Embed widget