![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TN Rain Alert: ஸ்ரீவில்லிபுத்தூரில் கொட்டும் மழை.. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. எங்கெல்லாம்? முழு விவரம்..
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்ய வாய்ப்புள்ளது.
![TN Rain Alert: ஸ்ரீவில்லிபுத்தூரில் கொட்டும் மழை.. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. எங்கெல்லாம்? முழு விவரம்.. light rain to be expected in 9 districts of tamilnadu for next 3 hours TN Rain Alert: ஸ்ரீவில்லிபுத்தூரில் கொட்டும் மழை.. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. எங்கெல்லாம்? முழு விவரம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/12/712ddbfc956eb9cf55388aac7c7b868b1662956116995276_0.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகத்தின் நீலகிரி, ஈரோடு, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூரில் நேற்று விடிய விடிய மிதமான மழை பெய்தது. ஸ்ரீவில்லிப்புத்தூர், மம்சாபுரம், கிருஷ்ணன் கோவில், உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மேலும் கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக
29.11.2022 முதல் 01.12.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
02.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்):
அதிராமபட்டினம் = 9.0, குன்னூர் = 5.0, சேலம் = 5.0, உதகமண்டலம் = 2.0, வால்பாறை = 0.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரையிலும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்
தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் கடந்த வாரம் நவம்பர் 17 முதல் 23 வரை வடகிழக்கு பருவமழை வெகு குறைவாக இயல்பை விட பதிவாகியுள்ளது.
இயல்பான மழை அளவு 34 மில்லி மீட்டர் ஆனால் தற்பொழுது பதிவான மழையின் அளவு 3 மில்லி மீட்டர் 91% குறைவாக மழை பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களின் நிலையை பொறுத்த வரையிலும், குறிப்பாக கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் இயல்பை விட 17 சதவீதம் பதிவாகியிருந்த நிலையில் கடந்த வாரம் அது நான்கு சதவீதமாக குறைந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)