மேலும் அறிய

17 வருடங்களுக்குப் பிறகு ஒரு அதிசயம்! டிசம்பரில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்!

Arulmigu Kanchi Ekambaranathar Thirukoil : "காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் டிசம்பர் மாதம் 8ஆம் தேதி நடைபெற உள்ளது"

"உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பாநாதர் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற டிசம்பர் மாதம் எட்டாம் தேதி நடைபெற உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்"

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் - Ekambareswarar Temple (Kanchipuram)

பஞ்சபூத ஸ்தலங்கள் என்பது, சிவனுக்கு உரிய மிக முக்கிய கோவில்களாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் நிலத்திற்கு உரிய கோவிலாக பார்க்கப்படுகிறது. இதனால் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், உலக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக இருந்து வருகிறது. மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில் முதல் கட்டுமானங்கள், 600 ஆம் ஆண்டே , கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

பல்லவர் காலம் முதல் இந்த கோவில் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது. அதே போன்று நாயக்க மன்னர்கள் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர். பல்வேறு மன்னர்கள் திருப்பணி செய்ததற்கான, ஆதாரமாக கல்வெட்டுக்கள் சான்றுகளாக கிடைத்துள்ளன. காஞ்சிபுரம் ஏகாம் நகர் கோயிலில், பெரிய ராஜகோபுரம் மன்னர் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 

தெற்கு ராஜகோபுரம், பல்லவ கோபுரம், மேற்கு கோபுரம் என 3 வகை ராஜகோபுரங்கள் இருப்பது மிகவும் பிரசித்தி பெற்றதாக பார்க்கப்படுகிறது. கிழக்குத்திசை நோக்கி இருக்கும் ஏகாம்பரநாதர் சந்நிதியில் மூலவராக மணல் லிங்கமாக சுயம்புவாக ஏகாம்பர நாதர் அருள்பாலிக்கிறார். கோயில் உட்புறத்தில் சிவகங்கை குளம் மற்றும், கம்பா தீர்த்த குளம் உள்ளது. கோயிலுக்கு வெளிப்பகுதியில் சர்வதீர்த்தமும், மங்கள தீர்த்தமும் உள்ளன. 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணிகள் - Ekambaranathar Temple

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று, 17 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் ஏகாம்பரார் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ஏகாம்புநாதர் கோயில் திருப்பணிகள் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேக திருப்பணிக்கு, இந்து அறநிலைத்துறை சார்பில் 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ள 16 கோடி ரூபாய் நிதி உபயதாரர்கள் மூலம், வசூலிக்கப்பட்டு கோவில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 

ராஜகோபுரம் பணி நிறைவடைந்தது - Ekambaranathar Temple Renovation

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஏகாம்பரநாதர் கோயிலில் பிரதான ராஜகோபுரத்தின் பணிகள், நிறைவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ஏகாம்பநாதர் கோயிலுக்கான திருப்பணிகளில் 12 பணிகள் நிறைவடைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.‌ இறுதி கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் எப்போது ? - Ekambaranathar Temple Kumbabishekam Date 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கும்பாபிஷேகம், வருகின்ற டிசம்பர் மாதம் எட்டாம் தேதி (08-12-2025) நடைபெறும் என அறிவித்துள்ளார். அதற்குள் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் திருப்பணிகள் நிறைவடையும் என தெரிவித்தார்.  நீண்ட நாட்களுக்கு பிறகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், காஞ்சிபுரம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
Cent Govt: இனி எல்லா போனிலும் இந்த செயலி கட்டாயம் இருக்கணும் - மத்திய அரசு உத்தரவு, ப்ரைவசிக்கு ஆப்பு?
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
IPL 2026: க்ரீனுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் CSK Vs KKR, ஐபிஎல் ஏல பட்டியல், 1355 பேர்? 77 இடங்கள்
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Madurai ; வாக்குறுதிகளை மறந்தால், மக்கள் ஓட்டு போட மறந்து போவார்கள் - முதல்வருக்கு ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை !
Embed widget