மேலும் அறிய

Caste Certificate: சாதிச் சான்றிதழுக்காக அவஸ்தைப்படும் தமிழர்கள்.. கேரளாவில் அநீதி - முடிவுக்கு கொண்டுவருவாரா முதல்வர்?

கேரளாவில் வசித்து வரும் தமிழ் மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க அந்த மாநில அரசு தயக்கம் காட்டி வருவதால் தமிழக மாணவர்கள் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வசித்து வருகின்றனர். குறிப்பாக, தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தமிழர்கள் பரவியுள்ளனர். 

கேரளாவில் வசிக்கும் தமிழர்கள்:

கேரளாவில் மட்டும் லட்சக்கணக்கான தமிழர்கள் உள்ளனர். கேரளாவில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை போன்ற பகுதிகளில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாக தமிழர்களே இன்றளவும் உள்ளனர். இவர்கள் அனைவரும் 19ம் நூற்றாண்டே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக சென்றவர்கள்.

1870 காலகட்டத்தில் திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்த தமிழர்கள் அன்று இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால் அந்த பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் 2 நூற்றாண்டுகளாக அந்த பகுதிகளில் கடுமையாக உழைத்து கரடு முரடான மலைகளை தேயிலை காடுகளாக மாற்றியவர்கள். 

சாதிச் சான்றிதழுக்காக அவதி:

ஆனால், இன்று அடிப்படை உரிமைக்காக கேரள மண்ணில் அவதிப்பட்டு வருகின்றனர். மூணார், பீர்மேடு, உடும்பன்சோலை. தேவிகுளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் தமிழ் மாணவர்கள் பலருக்கு்ம் சாதிச் சான்றிதழ்களே இல்லாமல் உள்ளது. தங்களுக்கு சாதிச்சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று கேரள அதிகாரிகளிடம் இந்த தமிழர்கள் மனு அளித்தால், 1950 காலகட்டத்தில் அவர்களது முன்னோர்கள் அங்கு பிறந்ததற்கான சான்றிதழ்களை கொண்டு வருமாறு உத்தரவிடுகின்றனர். 


Caste Certificate: சாதிச் சான்றிதழுக்காக அவஸ்தைப்படும் தமிழர்கள்.. கேரளாவில் அநீதி - முடிவுக்கு கொண்டுவருவாரா முதல்வர்?

1950 காலகட்டத்தில் படிப்பறிவு, சான்றிதழ்கள் என்பது இந்தியாவில் 90 சதவீத மக்களுக்கு கிடையாது. ஆனாலும், அந்த சான்றிதழை கொண்டு வர சொன்னால் எப்படி கொண்டு வருவது? என்று தமிழர்கள் புலம்புகின்றனர். மேலும், அந்த காலத்தில் தங்களது தாத்தாமார்கள் இங்கு வாழ்ந்தனர் என்றும், ஆனால் அவர்களது சான்று இல்லை என்று கூறினாலும் அதை கேரள அதிகாரிகள் ஏற்க மறுத்து வருவதாகவும் அங்கு வசிக்கும்  தமிழர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.   

இடர்கள்:

இதுமட்டுமின்றி மனுவை மலையாளத்தில் எழுதித் தருமாறும் அங்குள்ள அதிகாரிகள் வலியுறுத்துவதாகவும் அங்கு வசிக்கும் மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு மலையாளம் சரளமாக பேச வரும் என்றாலும், எழுதவும், படிக்கவும் வராது. 

மேலும், தமிழ்நாட்டில் உள்ள சாதிக்கு கேரளாவில் வேறு பெயர் இருக்கிறது. இதனால், தமிழர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ள சாதி கெஜட்டில் இல்லை என்ற காரணத்தை மேற்கோள் காட்டியும் சாதிச்சான்றிதழ் தர மறுப்பு தெரிவிக்கின்றனர். இதனால், அங்கு வசிக்கும் தமிழ் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது. 


Caste Certificate: சாதிச் சான்றிதழுக்காக அவஸ்தைப்படும் தமிழர்கள்.. கேரளாவில் அநீதி - முடிவுக்கு கொண்டுவருவாரா முதல்வர்?

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மலையாள மக்கள் வசிக்கின்றனர். ஆனால், அவர்களுக்குத் தேவையான சான்றுகள் தமிழக அரசால் முறையாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழர்களுக்கான சான்றுகளை கேரள அரசு வழங்க தயக்கம் காட்டி வருகிறது. 

வாக்குகள் மட்டும் வேண்டுமா?

கேரளாவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக உள்ள தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தேவையான சாதிச்சான்றிதழைத் தர மறுத்தாலும், வாக்காளர் அடையாள அட்டையை தவறாமல் அளித்துள்ளனர். அதாவது, கேரளாவில் வசிக்கும் தமிழர்களின் வாக்குகள் மட்டும் அங்குள்ள அரசியல் கட்சிகளுக்குத் தேவை என்றும், ஆனால் தமிழர்களின் உரிமைகள் மற்றும் வளர்ச்சியில் அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது. 

தீர்வு காணுமா தமிழக அரசு?

தேவிகுளத்தில் மட்டும் 99 சதவீதம் தமிழர்களே உள்ளனர். சாதிச்சான்றிதழ் இல்லாத காரணத்தால் அந்த மாநில மொழியான மலையாள மொழியை கற்பதிலும் அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், கேரள அரசின் மாநில அரசுத் தேர்வுகளுக்குத் தயார் ஆவதிலும் இந்த தமிழர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. 

கேரளாவில் மட்டும் சுமார் 50 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் கல்வி நலன் கருதி தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கு வசிக்கும் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள முதலமைச்சருடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெருக்கமான நட்பு கொண்டவர் என்பதால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று அங்கு வசிக்கும் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush
AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Honda: ஸ்கூட்டர் சந்தையை ஆளும் ஹோண்டா.. ஆக்டிவாவின் ஆதிக்கம், இளசுகளை அள்ளும் டியோ - மொத்த மாடல்கள்
Honda: ஸ்கூட்டர் சந்தையை ஆளும் ஹோண்டா.. ஆக்டிவாவின் ஆதிக்கம், இளசுகளை அள்ளும் டியோ - மொத்த மாடல்கள்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
Electric Car Sales: EV கார்களுக்கு என்னாச்சு? சரிந்த விற்பனை, தடுமாறும் டாடா, MG, மஹிந்த்ரா - ஹிட் லிஸ்டில் கியா
Electric Car Sales: EV கார்களுக்கு என்னாச்சு? சரிந்த விற்பனை, தடுமாறும் டாடா, MG, மஹிந்த்ரா - ஹிட் லிஸ்டில் கியா
Embed widget