மேலும் அறிய

மின் விளக்கை ஆன் செய்தபோது தாக்கிய மின்சாரம் - பள்ளி மாணவர் உயிரிழப்பு

மின் விளக்கை ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்தார்.

கரூர் அருகே கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் மின் விளக்கை ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பிளஸ் டூ படிக்கும் பள்ளி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 



மின் விளக்கை ஆன் செய்தபோது தாக்கிய மின்சாரம் - பள்ளி மாணவர் உயிரிழப்பு


கரூர் மாவட்டம் வெங்கமேடு அருகே உள்ள அருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது 54. இவரது வீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இவரது மகன் கௌசிக் வயது 17. இவர் கரூர் அடுத்த வெண்ணமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.

 


மின் விளக்கை ஆன் செய்தபோது தாக்கிய மின்சாரம் - பள்ளி மாணவர் உயிரிழப்பு

நேற்று மாலை 6 மணி அளவில் கட்டுமான பணிகள் நடைபெற்ற இடத்தில் மின் விளக்கை ஆன் செய்வதற்காக வீட்டின் மாடிக்கு சென்ற கௌஷிக் மின் விளக்கை ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் துடி துடித்து உயிரிழந்தார். சத்தம் கேட்டு மேலே வந்து பார்த்த சுப்பிரமணியன் தனது மகன் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு இதுகுறித்து வெங்கமேடு காவல் நிலையத்திற்கு அளித்தார். தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வெங்கமேடு காவல்துறையினர் உயிரிழந்த கௌசிக்கின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மின் விளக்கை ஆன் செய்தபோது தாக்கிய மின்சாரம் - பள்ளி மாணவர் உயிரிழப்பு

 

மின் விளக்கை ஆன் செய்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஒரே நாளில் ஐந்து பைக்குகள் திருட்டு குளித்தலை பகுதி பொதுமக்கள் அச்சம்

குளித்தலை அடுத்த குமாரமங்கலத்தை சேர்ந்தவர் ஷர்மா இவர் பைக்கில் தனது வயலுக்கு சென்று உள்ளார். அங்கு நிறுத்திவிட்டு வயல் வேலையை முடித்துவிட்டு திரும்பி வந்த பார்த்தபோது பைக்கை காணவில்லை. இது குறித்து சர்மா குளித்தலை போலீசில் புகார் அளித்துள்ளார். குளித்தலை அடுத்த சத்தியமங்கலம் ஊராட்சி தெற்கு மயில் ஆடியைச் சேர்ந்தவர் கருப்பையா விவசாயி. இவர் தனது பைக்கை கல்லுப்பட்டி பாலம் அருகி நிறுத்திவிட்டு விவசாயத் தோட்டத்திற்குச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பைக் மாயமானது தெரியவந்தது. இது குறித்து கருப்பையா குளித்தலை போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபோல் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த திருப்பதி என்பவர் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். மருத்துவமனைக்கு வெளியே தனது பைக் நிறுத்திவிட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வெளியே வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை இது குறித்து திருப்பதி குளித்தலை போலீசில் புகார் அளித்துள்ளார். மூன்று பேரது புகார்களும் பெற்றுக் கொண்ட குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அதுபோலவே குளித்தலை உட்கோட்டத்திற்கு உட்பட்ட பாலவிடுதி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கடவூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவர் தனது பைக்கை பேக்கரி கடை முன்பு நிறுத்தி வைத்துவிட்டு குளித்தலை வந்துள்ளார். திரும்பி சென்று பார்த்தபோது பைக் மாயமாகிவிட்டது இதேபோல் கடவூர் மேற்கு ராஜபார்ட் தெருவை சேர்ந்த பெரியண்ணன் என்கின்ற செல்வராஜ் என்பவர் தனது பைக்கை மாரியம்மன் கோவில் அருகே  நிறுத்தி விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மாயமாகிவிட்டது. இது குறித்து இருவரும் அளித்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். குளித்தலை உட்கோட்ட பகுதிகளில் ஒரே நாளில் ஐந்து பைக்குகள் மாயமானது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
EPS: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் விஷக் காய்ச்சல்; நோயாளிகளுக்கு ஒரே ஊசி? வேடிக்கை பார்க்கும் அரசு- ஈபிஎஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் விஷக் காய்ச்சல்; நோயாளிகளுக்கு ஒரே ஊசி? வேடிக்கை பார்க்கும் அரசு- ஈபிஎஸ் கண்டனம்
Tirupati Laddu Row: ’திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் கூடாது’- புதிய குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்!
Tirupati Laddu Row: ’திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் கூடாது’- புதிய குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman AIIMS Controversy : ’’தற்குறி.. உளறாதே!’’கட்சியை காப்பாத்திக்கோ’’ சீமானை விளாசிய  திமுகPriyanka Mohan : மொத்தமாக சரிந்த மேடை! விழுந்த பிரியங்கா மோகன்! ஷாக்கான ரசிகர்கள்Pawan Kalyan on Udhayanidhi : VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
ABP Exclusive: இஸ்ரேல் - ஈரான் போர்க்களத்தில் ABP News: இதயத்தை நொறுங்கவைக்கும் நேரடிக் காட்சிகள்!
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
TVK Vijay: தவெக மாநாடு எதற்கு தெரியுமா? தொண்டர்களுக்கு தலைவராக விஜய் எழுதிய முதல் கடிதம்
EPS: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் விஷக் காய்ச்சல்; நோயாளிகளுக்கு ஒரே ஊசி? வேடிக்கை பார்க்கும் அரசு- ஈபிஎஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் விஷக் காய்ச்சல்; நோயாளிகளுக்கு ஒரே ஊசி? வேடிக்கை பார்க்கும் அரசு- ஈபிஎஸ் கண்டனம்
Tirupati Laddu Row: ’திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் கூடாது’- புதிய குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்!
Tirupati Laddu Row: ’திருப்பதி லட்டு விவகாரத்தில் அரசியல் கூடாது’- புதிய குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்!
Breaking News LIVE OCT 4: அடுத்த ஹிஸ்புல்லா தலைமை கொல்லப்பட்டதாக தகவல். லெபனானில் இதுவரை 37 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE OCT 4: அடுத்த ஹிஸ்புல்லா தலைமை கொல்லப்பட்டதாக தகவல். லெபனானில் இதுவரை 37 பேர் உயிரிழப்பு
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
பிரம்ம முகூர்த்தத்தில் நடப்பட்ட மாநாட்டின் பந்தல்கால்... பிரம்மாண்டமாக தயாராகும் தவெக மாநாடு...
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Update: மக்களே குடை தயாரா? 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்
MS Dhoni: கோபத்தில் டிவியை உடைத்த தோனி? ஹர்பஜன் சிங் சொன்னது குப்பை என சிஎஸ்கே பிசியோ ஆவேசம்
Embed widget