மேலும் அறிய

கரூர்: அமராவதி ஆற்றில் நீர் திறப்பு குறைப்பு - வறண்டது செட்டிபாளையம் தடுப்பணை

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் கரூர் அருகே செட்டிபாளையம் தடுப்பணை வறண்ட நிலை காணப்படுகிறது.

அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் கரூர் அருகே செட்டிபாளையம் தடுப்பணை வறண்ட நிலை காணப்படுகிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 189 கன அடி தண்ணீர் வந்தது. குடிநீர் தேவைக்காக ஆற்றில் வினாடிக்கு 40 கன அடி தண்ணீராக குறைக்கப்பட்டது.

தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால் கரூர் அருகே செட்டிபாளையம் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்ட நிலையில் காட்சி அளிக்கிறது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம் தற்போது 52 அடியாக உள்ளது.

 


கரூர்: அமராவதி ஆற்றில் நீர் திறப்பு குறைப்பு - வறண்டது செட்டிபாளையம் தடுப்பணை

 

மாயனூர் கதவனுக்கு தண்ணீர் வரத்து நிலவரம்.

காவிரி ஆற்றில் மாயனூர் கதவனுக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 825 கன அடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 576 கன அடி தண்ணீராக உள்ளது. நேற்று விட இன்று காலை நிலவரப்படி 230 கன அடி தண்ணீர் குறைவாக வந்தது. அந்தத் தண்ணீர் முழுவதும் காவிரி ஆறு மற்றும் நான்கு பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

 

 

 


கரூர்: அமராவதி ஆற்றில் நீர் திறப்பு குறைப்பு - வறண்டது செட்டிபாளையம் தடுப்பணை

நங்காஞ்சி அணையின் தண்ணீர் வரத்து நிலவரம்.

திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதியில் மழை இல்லாததால் நங்காஞ்சி ஆற்றிற்கு தண்ணீர்  வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது 38.84 கனடியாக உள்ளது. ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் அணைப்பகுதியில் ஆறு மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

ஆத்துப்பாளையம் அணை தண்ணீர் வரத்து நிலவரம்.

க.பரமத்தி, அருகே உள்ள கார்விழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 13.90 அடி உயரமாக உள்ளது. மேலும், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆத்துப்பாளையம் அணைப்பகுதியில் 4.2 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில் கரூர் மாவட்டத்திலும் சில இடங்களில் கனமழையும் சில இடங்களில் சாரல் மலையும் பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தண்ணீர் வரத்து தற்போது குறைவாக இருப்பதால் பாசன விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

 

 


கரூர்: அமராவதி ஆற்றில் நீர் திறப்பு குறைப்பு - வறண்டது செட்டிபாளையம் தடுப்பணை

 கரூர் மாவட்டத்தில் இன்று மழையின் அளவை மாவட்ட நிர்வாகம் புள்ளி விவரத்துடன் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் 04.00 மில்லி மீட்டாகவும், ஆத்துப்பாளையத்தில் 10.0 மில்லி மீட்டராகவும், குளித்தலையில் 26.00 மில்லி மீட்டராகவும், இச்சம்பட்டியில் 3.6 மில்லி மீட்டராகவும், மழையின் அளவு பதிவாகியுள்ளன மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி 43.60 மில்லி மீட்டர் மழையின் அளவு பதிவாகியுள்ளது. இதன் சராசரி 03.66 மில்லி மீட்டர் ஆகும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
லியோ படத்தில் 35 லட்சம் மோசடி செய்த தினேஷ் மாஸ்டர்...பேட்டா கேட்டவரை உதைத்து மிரட்டிய வீடியோ வைரல்
லியோ படத்தில் 35 லட்சம் மோசடி செய்த தினேஷ் மாஸ்டர்...பேட்டா கேட்டவரை உதைத்து மிரட்டிய வீடியோ வைரல்
Embed widget