மேலும் அறிய

வனங்களையும், விலங்குகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும் - கரூர் மாவட்ட ஆட்சியர்

வனங்களையும், விலங்குகளையும் நாம் படிக்கக்கூடிய பள்ளி மாணவர்களாக இருந்தாலும், கல்லூரி மாணவர்களாக இருந்தாலும் அனைவரும் இன்று முதல் வனங்களையும், விலங்குகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் இன்று சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா 2022 குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், “வன வார விழா ஆண்டு தோறும் அக்டோபர் 2 முதல் அக்டோபர் 8 வரை ஒரு வாரம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றோம்.


வனங்களையும், விலங்குகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும் - கரூர் மாவட்ட ஆட்சியர்

நாம் இயற்கை சமநிலை உருவாக்கக்கூடிய வகையில் வனங்கள், வன விலங்குகளை பாதுகாக்க வேண்டும். அவ்வாறு பாதுகாப்பதனால் மனித குலத்திற்கு நன்மைகள் ஏற்படும். குறிப்பாக ஒரு குறிப்பிட்ட வகை விலங்குகள் அழிவதன் காரணமாக உணவு சுழற்சி தடைப்பட்டு, ஒரு வகை விலங்குகள் எண்ணிக்கை கூடுதலாகவும், ஒரு வகை விலங்கு எண்ணிக்கை குறைவாக உள்ளதால் உணவு சுழற்சி தடைப்படுகிறது. குறிப்பாக நமது கடவூர் காட்டுப்பகுதியில் வாழும் அறிய வகை தேவாங்கு விலங்கு விவசாயத்தை அழித்து வரும் பூச்சிகளை உணவாக உட்கொள்வாதல் விவசாயத்திற்கு பாதுகாப்பாக இருக்கும். இவ்வாறு உணவு சுழற்சி நடைபெறுகிறது. ஆகையால் வனங்களையும், விலங்குகளையும் நாம் படிக்கக்கூடிய பள்ளி மாணவர்களாக இருந்தாலும், கல்லூரி மாணவர்களாக இருந்தாலும் அனைவரும் இன்று முதல் வனங்களையும், விலங்குகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.


வனங்களையும், விலங்குகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும் - கரூர் மாவட்ட ஆட்சியர்

அதேபோல், அனைத்து மாணவ, மாணவியர்கள் ஆண்டிற்கு ஒரு மரம் வளர்ப்பேன் என்று அனைவரும் உறுதி மொழி இன்று எடுத்துக் கொள்வோம். ஆகையால் கரூர் மாவட்டத்தில் மரம் வளர்ப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கி அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும். மேலும், நெகிழி பயன்படுத்தாமல் அனைவரும் நெகிழி இல்லா மாவட்டமாக உருவாக்குவது ஒவ்வொருவரின் கடமையாகும். ஆகையால் நெகிழி பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை அறிவித்துள்ளார்கள். எனவே, அனைவரும் மஞ்சப்பைகளை பயன்படுத்தி நெகிழி இல்லாத மாவட்டமாக உருவாக்க முன் வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.


வனங்களையும், விலங்குகளையும் பாதுகாக்க முன்வர வேண்டும் - கரூர் மாவட்ட ஆட்சியர்

பின்னர் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா 2022 குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு நடைபெற்ற ஒவியப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்கள். தொடர்ந்து, நபார்டு திட்டத்தின் கிழ் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் பெருமக்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்க மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, அரசுகலைக்கல்லூரி முதல்வர் கௌசல்யா, வன சரக அலுவலர்கள் முரளிதரன், சசி ஹரிபிரியா, செல்வகுமார், அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிவண்ணன் (தொடக்கப்பள்ளி), கண்ணிச்சாமி (இடைநிலை), கனகராசு (தனியார்) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

ஜூலை 16 முக்கிய அறிவிப்பு: நாளை இந்த இடங்களில் மின்சாரம் இருக்காது! முழு லிஸ்ட் இதோ!
ஜூலை 16 முக்கிய அறிவிப்பு: நாளை இந்த இடங்களில் மின்சாரம் இருக்காது! முழு லிஸ்ட் இதோ!
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
செங்கல்பட்டில் மெகா வாய்ப்பு: 5,000+ காலிப்பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!
செங்கல்பட்டில் மெகா வாய்ப்பு: 5,000+ காலிப்பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!
நான் தெலுங்கனா? .. தமிழ் தேசியம் பேசினாலே பிடிக்காதா?.. சீமானை மறைமுகமாக சாடிய திருமாவளவன்!
நான் தெலுங்கனா? .. தமிழ் தேசியம் பேசினாலே பிடிக்காதா?.. சீமானை மறைமுகமாக சாடிய திருமாவளவன்!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
’’உங்க விஜய் ஆட்சி’’ அரசு அலுவலகங்களில் லஞ்சமா? புகார் அளிக்க வாட்ஸப் எண் அறிமுகம்
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
‘வரலாறு தெரியாமல் நீக்கம்’ சமூக நீதி துறை பெயருக்கு திமுக கடும் எதிர்ப்பு..!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
நாகர்கோவில் சிறையில் மாற்றுத்திறனாளி படுகொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
TTV Dhinakaran :
"தொட்டால் விடமாட்டேன்" சொன்ன விஜய்.! சொந்தக் கட்சி ஊழல்வாதிய என்ன செய்யப்போறீங்க.? டிடிவி கேள்வி
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
RB Udhayakumar: தவெகவில் இணையும் அதிமுகவினர்.. விஜயால் வயிறு எரிவதாக ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்!
Embed widget