மேலும் அறிய

கரூர் புத்தக திருவிழா; அடையாள சின்னம் இலட்சினை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

கரூர் புத்தக திருவிழாவையொட்டி, கடவூர் காடுகளில் வசிக்கும் தேவாங்கு விலங்கினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வினத்தை பாதுகாக்க கடவூரில் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கரூர் புத்தக திருவிழாவின் அடையாளச் சின்னம் இலட்சினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வெளியிட்டார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புத்தக திருவிழாவையொட்டி, தேவாங்கு விலங்கினத்தை மையப்படுத்தி “நூலன் மற்றும் நூலி” என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட அடையாள சின்னமான இலட்சினை (MASCOT) மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வெளியிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கரூர் புத்தக திருவிழாவையொட்டி, கடவூர் காடுகளில் அதிகளவு வசிக்கும் தேவாங்கு விலங்கினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வினத்தை பாதுகாக்க கடவூரில் தேவாங்கு சரணாலயம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பாலின சமத்துவத்தை உணர்த்தும் வகையிலும் மாற்றுத்திறனாளிகளின் சம உரிமைகளை அடையாளப்படுத்தும் வகையிலும் நூலனும், நூலியும் அடையாள சின்னமான இலட்சினை (MASCOT)  வடிவமைக்கப்பட்டுள்ளன.



கரூர் புத்தக திருவிழா; அடையாள சின்னம் இலட்சினை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்


கரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம், நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து மாபெரும் புத்தக திருவிழா - 2022  (19.08.2022  முதல்  29.08..2022  வரை) கரூர் திருமாநிலையூரில் 19.08.2022 தேதி 100 அரங்குகளுடன் கூடிய மாபெரும்  புத்தக திருவிழாவை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தலைமையேற்று துவக்கி வைக்க உள்ளார்கள்.  இந்த புத்தக திருவிழாவில் 100 புத்தக அரங்குகள், தொல்லியல் அருங்காட்சியகம், கோளரங்கம், குறும்பட திரையரங்கம், உணவரங்கம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் கொண்ட அரங்குகள் இடம் பெற உள்ளன. தினந்தோறும் 4000க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை புத்தக திருவிழாவிற்கு வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினந்தோறும் மாலை 04.00 மணி முதல் 06.00 மணி வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போதைப் பழக்கத்திற்கெதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அதை தொடர்ந்து சிந்தனை நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளன.


கரூர் புத்தக திருவிழா; அடையாள சின்னம் இலட்சினை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

துவக்க நாள் விழாவினை தொடர்ந்து   

2-ஆம் நாள் நிகழ்ச்சியாக (20.08.2022) பத்ம ஸ்ரீ முனைவர் சாலமன் பாப்பையா மற்றும் குழுவினரின் "மனிதனின் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை செய்வது  படிப்பறிவே  பட்டறிவே" என்ற தலைப்பில் பட்டிமன்றம்,

3-ஆம் நாள் நிகழ்ச்சியாக (21.08.2022) செந்தில் கணேஷ் -ராஜலட்சுமி குழுவினரின் "மண்மனம் - மக்களிசை" என்ற கலை நிகழ்ச்சிகளும்,

4-ஆம் நாள் நிகழ்ச்சியாக (22.08.2022) மருத்துவர் சிவராமனின் "நலம் - இனி நம் முதல் தேடல்"என்ற தலைப்பில் சிறப்புரையும் மற்றும் மல்லூரின் "அறிவே துணை" என்ற தலைப்பில் சிறப்புரையும்,

5-ஆம் நாள் நிகழ்ச்சியாக (23.08.2022) மோகன சுந்தரம் "தனமும், இன்பமும் வேண்டும்" என்ற தலைப்பில் சிறப்புரையும் மற்றும் நீயா நானா கோபிநாத்தின் "எது புரிந்தால் வாழ்க்கை புரியும்" என்ற தலைப்பில் சிறப்புரையும்,

6-ஆம் நாள் நிகழ்ச்சியாக (24.08.2022) பாரதி கிருஷ்ணகுமாரின் "அறம் செய விரும்பு"  என்ற தலைப்பில் சிறப்புரையும்,

7-ஆம் நாள் நிகழ்ச்சியாக (25.08.2022) சுந்தர ஆவுடையப்பனின் தண்டோரா" என்ற தலைப்பில் சிறப்புரையும் மற்றும் சிந்தனை கவிஞர் கவிதாசனின் "வெல்வதற்கே வாழ்க்கை"  என்ற தலைப்பில் சிறப்புரையும்,

8-ஆம் நாள் நிகழ்ச்சியாக (26.08.2022) பாரதிபாஸ்கரின் கதை கேளு... கதை கேளு... என்ற தலைப்பில் சிறப்புரையும்,

9-ஆம் நாள் நிகழ்ச்சியாக (27.08.2022) கலைமாமணி திண்டுக்கல் ஐ.லியோனி மற்றும் குழுவினர் "மகிழ்வும், நிம்மதியும் தருவது  கிராம வாழ்க்கையா நகர வாழ்க்கையா" என்ற தலைப்பில் பட்டிமன்றமும், 

10-ஆம் நாள் நிகழ்ச்சியாக (28.08.2022) முனைவர் ஜெயசீலன் இயக்குநர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை " நல்ல காகிதம் செய்வோம் "என்ற தலைப்பில் சிறப்புரையும் மற்றும் சுகிசிவம் " எங்கோ பெய்த மழை " என்ற தலைப்பில் சிறப்புரையும்,

11-ஆம் நாள் நிகழ்ச்சியாக (29.08.2022) பத்மஸ்ரீ கலைமாமணி நர்த்தகி நடராஜ் மற்றும் குழுவினர் "சந்தச் சபையில் செந்தமிழ் ஆடல்" என்ற நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. 


கரூர் புத்தக திருவிழா; அடையாள சின்னம் இலட்சினை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்

இந்த புத்தக கண்காட்சி பொதுமக்கள் மாணவ, மாணவியர்களிடையே வாசிப்பு திறனை உருவாக்கி அறிவினை மேம்படுத்தும் விதமாக அமையவுள்ளது. அனுமதி இலவசம், அனைவரும் வாரீர், பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், புத்தகப்பிரியர்கள், வாசக வட்டத்தை சேர்ந்தவர்கள் இப்புத்தகக் கண்காட்சியினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


 

தலைப்பு செய்திகள்

திருமணமான 15 நாளில் அதிர்ச்சி ; மாமாவுடன் ஓடிய புதுப்பெண் !! ரூ.4 லட்சம் ஏமாந்த வாலிபர்
திருமணமான 15 நாளில் அதிர்ச்சி ; மாமாவுடன் ஓடிய புதுப்பெண் !! ரூ.4 லட்சம் ஏமாந்த வாலிபர்
Sabarivarman Custodial Death : அரசு வேலையையும், நிவாரணத்தை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்.! திரும்பிய அமைச்சர்கள்- நடந்தது என்ன.?
அரசு வேலையையும், நிவாரணத்தை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்.! திரும்பிய அமைச்சர்கள்- நடந்தது என்ன.?
பக்தர்களின் ‘ஓம் சக்தி’ கோஷம்! காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தங்கத்தேர் உற்சவம்!
பக்தர்களின் ‘ஓம் சக்தி’ கோஷம்! காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தங்கத்தேர் உற்சவம்!
சென்னையில் சிக்கிய பெரிய நெட்வொர்க்! பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளா? உறைந்துபோன போலீசார்!
சென்னையில் சிக்கிய பெரிய நெட்வொர்க்! பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளா? உறைந்துபோன போலீசார்!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
நகைப்பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.! ரூ.5000 சரிந்தது- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
Ather EL Scooter: ஏதரின் புதிய மலிவு விலை குடும்ப ஸ்கூட்டர், 105KM ரேஞ்ச் - டிவிஎஸ், பஜாஜ் மாடல்கள் தாங்குமா?
ஏதரின் புதிய மலிவு விலை குடும்ப ஸ்கூட்டர், 105KM ரேஞ்ச் - டிவிஎஸ், பஜாஜ் மாடல்கள் தாங்குமா?
Sabarivarman Custodial Death : அரசு வேலையையும், நிவாரணத்தை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்.! திரும்பிய அமைச்சர்கள்- நடந்தது என்ன.?
அரசு வேலையையும், நிவாரணத்தை நிராகரித்த சபரிவர்மன் குடும்பத்தினர்.! திரும்பிய அமைச்சர்கள்- நடந்தது என்ன.?
Embed widget