மேலும் அறிய
கருணாநிதி சிலையின் பீடத்தில் இடம்பெற்றுள்ள 5 கட்டளைகள் என்னென்ன?
சென்னையில் புதியதாக திறக்கப்பட்டுள்ள கருணாநிதியின் வெண்கலச்சிலையின் கீழ் அவரது 5 பொன்மொழிகள் கட்டளைகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருணாநிதி சிலை
சென்னை, ஓமந்தூரரார் அரசினர் தோட்டத்தில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். அவரது சிலையின் கீழ் 5 கட்டளைகள் இடம்பெற்றுள்ளது. அவை பின்வருமாறு :
- வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்.
- அண்ணா வழியில் அயராது உழைப்போம்.
- ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்.
- இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
- மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி.
இவை அனைத்தும் கருணாநிதியின் பொன்மொழிகள் ஆகும். இதையடுத்து, சென்னை, கலைவாணர் அரங்கில் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















