மேலும் அறிய

Kallakurichi Hooch Tragedy: கண்ணீரில் கள்ளக்குறிச்சி, காவல் நிலையம் அருகே நடந்த விற்பனை ? - கண்டுகொள்ளாத போலீஸ் ?

Illicit Liquor: காவல் நிலையம், நீதிமன்றம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அருகே படுஜோராக விற்பனை நடைபெற்று வந்துள்ளது.

கள்ளச்சாராயம் என்பது ஏதோ கிராமப்புறங்களிலோ, மலை கிராமங்களிலோ விற்பனை செய்யப்படும் என்பதுதான் பொது பார்வையாக இருந்து வருகிறது. ஆனால் கள்ளக்குறிச்சியில் மாவட்ட தலைநகரிலேயே, கள்ளச்சாராயம் படுஜோராக விற்பனை நடந்ததை தொடர்ந்து 110 க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில், கள்ளச்சாராயம் குடித்ததில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். 70-க்கும் மேற்பட்ட நபர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Kallakurichi Hooch Tragedy: கண்ணீரில் கள்ளக்குறிச்சி, காவல் நிலையம் அருகே நடந்த விற்பனை ? - கண்டுகொள்ளாத  போலீஸ் ?

மெத்தனால் கலந்த விஷ சாராயம்

இதுவரை கள்ளச்சாராயம் விற்றதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கும் மாற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயத்தால் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதோடு, கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த  விசாரணை ஆணையம் அமைத்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

குறைந்த விலை கள்ளச்சாராயம் 

அதாவது கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்திருப்பவர்கள் பெரும்பாலானோர் ஏழை எளிய குடும்பத்தை பின்புலமாகக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அதிகளவு உடல் உழைப்பை செலுத்தும், கூலித் தொழிலாளர்களாகவும் தூய்மை பணி தொழிலாளர்களாகவும் இருந்து வருகின்றனர். இதனால் இவர்களால் அரசு மதுபான கடைகளில், 150 200 ரூபாய் கொடுத்து மது வாங்குவது என்பது கடினமான ஒன்று. இந்த சூழலை பயன்படுத்திக்கொண்டு புரிந்த விலையில் விஷச்சாராயத்தை இப்பகுதியில் விற்பனை மேற்கொண்டு வந்துள்ளனர். அதாவது இப்பகுதியில் கலாச்சாராயம் சிறிய பாக்கெட் 30 ரூபாய்க்கு, பெரிய பாக்கெட் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்து வந்துள்ளனர்.


Kallakurichi Hooch Tragedy: கண்ணீரில் கள்ளக்குறிச்சி, காவல் நிலையம் அருகே நடந்த விற்பனை ? - கண்டுகொள்ளாத  போலீஸ் ?

 அதிகாலையிலேயே துவங்கும் விற்பனை

கள்ளக்குறிச்சி நகர் பகுதிகளில் அதிகாலையிலேயே கள்ளச்சாராய விற்பனை கொடி கட்டி பறந்து வந்துள்ளது. காலை 5 மணிக்கு எல்லாம் டோர் டெலிவரி செய்யும் அளவிற்கு, சாராய வியாபாரிகள் செல்வாக்காக வலம் வந்துள்ளனர். இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டே கள்ளச்சாராயத்தை விற்பனை செய்து வந்துள்ளனர்.


Kallakurichi Hooch Tragedy: கண்ணீரில் கள்ளக்குறிச்சி, காவல் நிலையம் அருகே நடந்த விற்பனை ? - கண்டுகொள்ளாத  போலீஸ் ?

பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயத்தை விற்பதற்கு என்ன ஒரு சில குடிசை வீடுகள், ஆகியவற்றை விற்பனை மையங்களாகவே பயன்படுத்தி வந்துள்ளனர். இத்தனைக்கும் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு பகுதியில் கள்ளச்சாராயம், தங்கு தடை இன்றி விற்பனை நடைபெற்று வந்துள்ளது. பேருந்து நிலையம் அருகேவும் கள்ளச்சாராயத்தை எந்தவித, அச்சமும் இன்றி விற்பனை செய்து வந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். தேவையானவற்றை கள்ளச்சாராய வியாபாரிகள் கவனிப்பதால், கண்டும் காணாமலும் போலீஸ் இருந்து வந்துள்ளது.

அரசு அலுவலகங்களுக்கு நடுவில்

சுற்றி குடியிருப்பு பகுதிகள் அதிகம் இருக்கும் இடங்களில் கூட, எந்தவித அச்சமும் இல்லாமல் கள்ளச்சாராயம் வியாபாரம் நடைபெற்று வந்துள்ளது. இதுகுறித்து புகார் தெரிவிக்கும் பொது மக்களையும் மிரட்டும் வகையில் கலாச்சார வியாபாரிகள், அச்சுறுத்தி வந்துள்ளனர். இதயம் மீறி ஒரு சிலர் ரகசிய புகார் அளித்தாலும் காவல்துறையினர் கண்டும் காணாமலும் இருந்து வந்துள்ளனர். விற்பனை நடைபெற்ற இடத்தில் இருந்து, அருகே நீதிமன்றம், காவல் நிலையம், தாசில்தார் அலுவலகம் ஆகியவை இருந்து வந்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.