மேலும் அறிய

EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".

EPS : தமிழகத்தில் மீண்டும் மன்னராட்சி ஏற்பட துணை நிற்கக்கூடாது. ஏற்கனவே தேவையில்லை என்று தான் மன்னராட்சியை ஒழிக்கப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி பேச்சு.

சேலம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மாற்றுக் கட்சியினர் 2000க்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, "திமுக தலைவர் எப்பொழுது பார்த்தாலும் ஊடகச் செய்தி, பொதுக்கூட்டத்தில் பேசும்போது 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெறும் என்று கூறுகிறார். அது இல்லை என்பதை இங்கு நிரூபித்து காட்டியுள்ளீர்கள். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்று கூறுவார்கள். இங்கு கட்சியில் இணைந்தவர்கள் சாட்சி.

மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும்:

மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் அமையும் என்பதற்கு அதிமுகவில் பல்வேறு கட்சியிலிருந்து இணைந்துள்ளீர்கள். அதிமுக வலுவான கட்சி என்பதற்கு சாட்சியாக அமைந்து வருகிறது. திமுக தேய்ந்து வருகிறது என்றார். திமுக மீண்டும் மன்னராட்சி, வாரிசு ஆட்சி, குடும்ப ஆட்சி வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஏற்கனவே மக்கள் போராடி மன்னராட்சி, குடும்ப ஆட்சியை விரட்டியடிக்கப்பட்டது. மீண்டும் மன்னராட்சி தமிழகத்தில் ஏற்பட துணை நிற்கக்கூடாது, ஏற்கனவே தேவையில்லை என்று தான் மன்னராட்சியை ஒழிக்கப்பட்டது என்றார்.

EPS Slams DMK:

குடும்ப ஆட்சிக்கு முடிவு:

தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் வரவேண்டும் என்பதற்காக கருணாநிதி, அவருக்கு பிறகு ஸ்டாலின், பின்னர் உதயநிதி, தற்பொழுது இன்பநதி. திமுகவில் நிதி என்ற பெயர் வைத்துள்ளார்கள். நிதி வேண்டும் என்பதற்காக வைத்துள்ளார்கள். 2026 இல் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுகின்ற தேர்தலாக அமையும். அப்பொழுது தான் மக்கள் வாழ முடியும் என்றார். எம்ஜிஆர், ஜெயலலிதா தமிழக மக்களை குழந்தைகள் போல் பாவித்தார்கள். மக்களுக்கு என்ன தேவை அவர்களுக்கு என்ன செய்யவேண்டும், அரசின் மூலம் போடும் திட்டத்தின் மூலமாக மக்கள் என்ன பயனடைவார்கள் என்று பார்த்து பார்த்து திட்டங்களை வகுத்தார்கள். மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் நம் தலைவர்கள். கருணாநிதி வீட்டு மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவர். இதனால்தான் அதிமுகவை சீண்டி கூட பார்க்க முடியவில்லை, மக்களோடு மக்களாக இருந்து மக்களுக்கு பிரச்சினை வரும்போது உறுதுணையாக நின்றார்கள்.

அதிமுகவை ஒழிக்க பார்த்தார்கள், ஆனால் நடக்கவில்லை, ஏனென்றால் மக்களுக்கான கட்சியாக அதிமுக இருந்தது. எனக்கு பின்னாலும் நூறாண்டுகள் அதிமுக கட்சி வாழும் என்று மக்களை நம்பி தான் சொன்னார்கள். அதிமுகவிற்கு தனி தலைவர்கள் கிடையாது, அனைவரும் தலைவர்கள் பொறுப்பாளர்கள் தான் கட்சியில் இணைந்தவர்களுக்கு அதிமுக சொத்து, வேற எந்த கட்சியும் இப்படி இருக்காது. அதிமுக உறுப்பினர்கள் அனைவருக்கும் அதிமுக சொந்தம் என்றும் பேசினார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எண்ணற்ற திட்டங்களை அதிமுக நிறைவேற்றி கொடுத்துள்ளது. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக கூறுகிறார்கள், மக்களின் வரிப்பணத்தை தான் கொடுத்தார்கள். கவர்ச்சிகரமான திட்டத்தை கூறி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளார்கள். அதிமுக போரடி தான் ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொடுத்தது, அவர்களாக மனதார கொடுக்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் 1500 ரூபாய் கொடுப்பதாக உறுதி அளித்தோம். சில பேர் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதை நம்பி மாற்றி ஓட்டுபோட்டார்கள் என்றும் கூறினார்.

EPS Slams DMK:

எம்ஜிஆரால் ஏழைகளுக்காக துவங்கப்பட்ட கட்சி அதிமுக. கண்ணை இமை காப்பது இருப்பதுபோல ஜெயலலிதா காத்தார்கள். அதிமுக ஆட்சியைப் பற்றி குறை சொல்லமுடியாத அளவிற்கு சிறப்பான ஆட்சியை அதிமுக அரசாங்கம் கொடுத்தது. தற்போது திமுக ஆட்சியில் அப்படி இல்லை. சிறுமிகள் முதல் பெரியவர்கள் அனைவரையும் கற்பழிக்கிறார்கள். கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினை எங்கு பார்த்தாலும் இருக்கிறது.

ஒரு சில ஆசிரியர்களால் பள்ளியில் படிக்கும் சிறுமிகள் வன்கொடுமை செய்யப்படுகிறார்க பயிரை வேலி மேய்வது போன்று உள்ளது. இந்த திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது என்றார். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக நிதி வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவ்வாறு கொடுக்காவிட்டால் மாநில அரசின் வருவாய் எடுத்து கொடுக்க வேண்டியது தானே, ஏழை எளிய மக்களுக்கு உரிய நிதியை விடுவிக்க வேண்டும் எனவும் பேசினார்.

 

E

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. தூக்கத்திலும் நடு நடுங்கிய ரத்தத்தின் ரத்தங்கள்-பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
புதுச்சேரியில் அதிர்ச்சி! போலி மாத்திரை தொழிற்சாலைகள் தொடர் கண்டுபிடிப்பு: ரூ.30 கோடி மதிப்பிலான மருந்துகள் பறிமுதல்!
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
அண்ணா திமுகவா.? அமித்ஷா திமுக வா.? இபிஎஸ்யை போட்டுத்தாக்கும் அமைச்சர் ரகுபதி
Embed widget