மேலும் அறிய

Madhampatty Rangaraj Case: மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு; ஜாய் கிரிசில்டாவிற்கு ஆறுதல்; போலீசாருக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு

மாதம்பட்டி ரங்கராஜ் மீதான ஜாய் கிரிசில்டாவின் வழக்கில் முக்கிய திருப்பமாக, ரங்கராஜ் மீதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கின் விசாரணையில், மாதம்பட்டி ரங்கராஜ் மீதான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு, காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றைய விசாரணையில் நடந்தது என்ன.? பார்க்கலாம்.

ஜாய் கிரிசில்டா தொடர்ந்த வழக்கு

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நடிகரும், பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை 2-வது திருமணம் செய்து, கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றி விட்டதாக, பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீதிமன்றத்தில் நடந்த விசாரணை

இந்த சூழலில், மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாய் கிரிசில்டா மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாய் கிரிசில்டா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சுதா, புகார் மீது காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை என குற்றம்சாட்டினார். மேலும், மாதம்பட்டி ரங்கராஜ் பல பெண்களை ஏமாற்றியுள்ளதாகவும், அவருக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் வாதிட்டார். அதோடு, புகார் அளித்து 40 நாட்களுக்கு பின்னரே காவல்துறை வழக்கு பதிவு செய்ததாகவும், அந்த வழக்கும் உரிய பிரிவுகளில் பதிவு செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து, காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், புகார் மீதான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டிய தேவையில்லை என்றும், சட்டப்படி விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும், ஜாய் கிரிசில்டா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், அவரை விசாரணைக்கு அழைப்பதில் சிக்கல் இருந்ததாகவும் அவர் கூறினார்.

காவல்துறைக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இரு தரப்பு வாதங்களையும் தொடர்ந்து, விசாரணையின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதோடு, இந்த வழக்கு தொடர்பாக, தங்களிடம் உள்ள ஆதாரங்களை காவல்துறையிடம் அளிக்க, ஜாய் கிரிசில்டா தரப்பிற்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.

மாதம்பட்டி ரங்கராஜை காவல்துறையினர் சரியாக விசாரிக்கவில்லை என்று ஜாய் கிரிசில்டா தரப்பு கூறும் நிலையில், இதற்குப் பிறகாவது, இந்த வழக்கில் உண்மை என்ன என்பது வெளி வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Tamilnadu Roundup: பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
America Vs Syria: ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Tamilnadu Roundup: பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
America Vs Syria: ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
Bangladesh Protest Violence: வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்; கொடூரமாக கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்து இளைஞர்; பதற்றம்
வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்; கொடூரமாக கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்து இளைஞர்; பதற்றம்
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்கள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்கள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
Embed widget