மேலும் அறிய

தமிழகத்தில் முதல் முறையாக கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருள் விநியோகம்  திட்டம் தொடக்கம்

அமைச்சர் சக்கரபாணி மற்றும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தனர் - முதற்கட்டமாக 2 மாவட்டங்களில் தொடக்கம்

தமிழகத்தில் முதல் முறையாக, கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருள் விநியோகம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் அமைச்சர் சக்கரபாணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
 
சென்னை திருவல்லிக்கேணி நடுக்குப்பம் நியாய விலை கடையில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் பொது விநியோகத் திட்ட அங்காடிகளில், கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருள் விநியோகம் அறிமுகப்படுத்த கூடிய திட்டம் சென்னை மற்றும் அரியலூர் மாவட்டம் என இரண்டு இடங்களில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.
 
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி: பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் பெறுவதில் சிரமம் இருக்கிறது என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து தமிழகத்தில் முதல்முறையாக கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பரிச்சாத்த முறையில் இந்த திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றால் இது முழுமையாக அமல்படுத்தப்படும். கேரளா தெலுங்கானா, அசாம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முழுமையாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
மேலும் பொது மக்களுக்கு இந்த திட்டம் பயன்பெறும் வகையில் இருந்தால் விரைவில் தமிழக முழுவதும்  அமல்படுத்தப்படும். குடும்ப அட்டை வழங்குவதில் எவ்வித தேக்கமுமில்லை. கடந்த 15 மாதம் திமுக ஆட்சியில் 13 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு குடும்ப அட்டைகள் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வழங்கப்பட்டு இருக்கிறது. தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக நியாய விலைக் கடைகளில் சர்க்கரை வழங்குவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், இது தொடர்பாக முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget