மேலும் அறிய

Ramadoss: முழு மது விலக்குக்கான ஆரம்பமாக இருக்கட்டும்.. மது வணிக நேரத்தை குறைக்க ராமதாஸ் அறிவுறுத்தல்

உயர்நீதிமன்ற யோசனைப்படித் தமிழ்நாடு அரசு மது வணிக நேரத்தை குறைக்க வேண்டும். அது முழு மதுவிலக்கு ஏற்படுத்த நல்ல தொடக்கமாக அமையட்டும் என ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார். 

உயர்நீதிமன்ற யோசனைப்படித் தமிழ்நாடு அரசு மது வணிக நேரத்தை குறைக்க வேண்டும். அது முழு மதுவிலக்கு ஏற்படுத்த நல்ல தொடக்கமாக அமையட்டும் என ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்துப் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:  

’’தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளின் மது விற்பனை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும்;  மது அருந்துவதற்கு உரிமம் பெறும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு பரிந்துரை வழங்கியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்ப்பார்ப்புக்கு இது குறைவுதான் என்றாலும், முழு மதுவிலக்கை ஏற்படுத்துவதற்கு நல்ல தொடக்கமாக இருக்கும் என்ற அடிப்படையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.

மது விற்பனையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்குகள் மீது நீதியரசர்கள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த யோசனைகளை வழங்கியிருக்கிறது.  மருத்துவப் பயன்பாட்டுக்காக மட்டுமே மது பயன்படுத்தப்பட வேண்டும்; மற்ற பயன்பாடுகளுக்கு மது தடை செய்யப்பட வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டும் விதியான 47-ஆவது பிரிவில் கூறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள், மதுப் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்தும், மதுப் புட்டிகளில் பொறிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை வாசகங்களை எவரும் மதிக்காதது குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆட்சியாளர்களுக்கு இல்லாத அக்கறை

மதுவால் சமூகம் சீரழிவது குறித்த நீதிபதிகளின் கவலையும், அக்கறையும் பாராட்டத்தக்கவை. அதே உணர்வும், சமூகத்தின் மீதான அக்கறையும் ஆட்சியாளர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். மது கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு  சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊடுருவியிருக்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்தில் மக்கள் மத்தியில் மது அருந்தி செல்லும் காட்சிகள் வாடிக்கையாகி விட்டன. பள்ளிக்கூடங்களில் மாணவிகள் மது அருந்தி மயங்கி விழும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. நகர்ப்புற பகுதிகளில் ஒரு மாணவர் அவரது பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும் என்றால், அதற்குள்ளாக அவர் 3 மதுக்கடைகளை  கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டு எந்த சிரமுமின்றி, தாராளமாக மது கிடைப்பதுதான் சிறுவர்கள் வரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாவதற்கு காரணம் ஆகும்.

மதுக்கடைகளில் 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது; அதுகுறித்த அறிவிப்பு பலகை மதுக்கடைகளின் முகப்பில் வைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து  வலியுறுத்தி வருகிறது. ஆனால், எந்தக் கடையிலும் அத்தகைய அறிவிப்பு பலகைகள் இன்றைய நிலையில் வைக்கப்படவில்லை. 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு தடையின்றி மது விற்பனை செய்யப்படுகிறது.

சாலை விபத்துகள் குறையும்

மதுக்கடைகளில் மது விற்பனை நண்பகல் 12.00 மணிக்கு தொடங்குவதால் பலர் மது அருந்திவிட்டு பணிக்கு செல்வதில்லை. அதேபோல், இரவு 10.00 மணி வரை மதுக்கடைகள் திறந்திருப்பதால் இரவு நேரங்களில் சாலை விபத்துகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.  சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்திருப்பதைப் போன்று, பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை  மது விற்பனை நேரத்தை குறைத்தால் மதுவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்; இரவு நேரங்களில் சாலை விபத்துகளும் குறையும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை ஒரு சொட்டு மது கூட இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு ஆகும். அதற்காகத்தான் கடந்த 42 ஆண்டுகளாக தொடர்ச்சியாக போராடி வருகிறேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழகத்தில் முழு மதுவிலக்கை  ஏற்படுத்த வேண்டும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும் போதெல்லாம், 2021 தேர்தலில் அது குறித்த வாக்குறுதியை திமுக அளிக்கவில்லை என்று கூறி அரசு நழுவிக்கொள்கிறது.

படிப்படியாக மதுவிலக்கு

சட்டப்பேரவைத் தேர்தலில் அத்தகைய வாக்குறுதியை திமுக அளிக்கவில்லை என்றாலும் கூட, முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் முதன்முறையாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். மதுவிலக்கை தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறது என்பது தான் அதன் பொருள்.

எனவே, சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தவாறு தமிழகத்தில் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும். அது தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த நல்ல தொடக்கமாக அமைய வேண்டும்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
Tomato Price: பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
பாதியாக குறைந்த தக்காளி விலை.. ஒரு கிலோ இவ்வளவு தானா.? குஷியில் இல்லத்தரசிகள்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Embed widget