மேலும் அறிய

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இம்மாதம் இறுதியில் நியாய விலைக் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைக்கும்..

நியாய விலைக் கடைகளிலும் வரும் 31.08.2024 அன்று அனைத்து அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் பெற்றுக் கொள்ளலாம் -

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து குடி மக்களுக்கும் குறிப்பாக, ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு, மாதந்தோறும் இன்றியமையாப் பொருட்களை நல்ல தரத்தோடும், நியாயமான விலையிலும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையிலேயே நியாய விலைக் கடைகள் வாயிலாக விநியோகம் செய்வதே பொது விநியோகத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

புதுவிநியோக திட்டத்தின் நோக்கங்கள்:

தமிழ்நாட்டிலிருந்து , பசி,பட்டினியை அறவே ஒழித்தல், இன்றியமையாப் பொருட்களின் விலை ஏற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து குடி மக்களை காத்தல்,பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை செறிவூட்டி வழங்குவதன் மூலம் சத்து குறைபாட்டை குறைத்தல்.

வீட்டு உபயோக எரிபொருள்களான மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு உருளை ஆகியவற்றை மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குதல், குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் அணுகும் வகையில் நியாய விலைக்கடைகள் அமைத்தலை உறுதிசெய்தல். ஏழை, எளிய மக்கள் வாங்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் வழங்குதல், மாதந்தோறும் சரியான நேரத்தில் இன்றியமையாப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகும்.


குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இம்மாதம் இறுதியில் நியாய விலைக் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைக்கும்..

குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஏழை, எளிய மக்கள் முழுமையாக பயன் அடைய வேண்டும்.  தரமான உணவை உட்கொள்ள வேண்டும் என்பதற்காக  நியாய விலை கடைகள் அனைத்து இடங்களிலும் திறக்கப்பட்டது. இதன் மூலம் மிக குறைவான விலைகளில் சத்தான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

மேலும் நியாய விலை கடைகளில் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், சர்க்கரை, உள்ளிட்ட  அனைத்து பொருட்களும் முறையாக பொதுமக்களுக்கு சென்று அடைகிறதா என்று கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு தமிழக அரசால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

நியாய விலை கடைகள் அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட கால நேரங்களில் முறையாக திறக்க வேண்டும். இல்லை என்று  புகார்கள் வரும் பட்சத்தில் உரிய நியாய விலை கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆகையால் எந்த பொருள்களும் தடையின்றி பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் விநியோகம் செய்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த நியாய விலை கடைகளால் தமிழ்நாட்டில் பல லட்சம் மக்கள் பயனடைந்து வருகிறார்கள். மேலும் பொது மக்களின் கோரிக்கையை ஏற்ப சில இடங்களில் புதிதாக நியாய விலை கடைகள் இருப்பதற்காக நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இம்மாதம் இறுதியில் நியாய விலைக் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைக்கும்..

இந்த மாதம் இறுதியில் நியாய விலைகள் இயங்கும். 

இந்நிலையில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது.. 

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மாதத்தின் கடைசி பணி நாளில் இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் மேற்கொள்ளப்படுவதில்லை.

ஆனால் இம்மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் இன்றியமையாப் பண்டங்கள் தடையின்றி கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வருகின்ற 31.08.2024 அன்று அனைத்து நியாய விலைக் கடைகளில் இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 2024 மாதத்திற்கான பொருட்கள் பெறாத அட்டைதாரர்கள் பெற்று பயனடையலாம் என உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.