மேலும் அறிய

Ilayaraja Returns: "82 வயசு ஆயிடுச்சுன்னு நினைக்க வேண்டாம், இனி தான் எல்லாமே ஆரம்பம்".. இளையராஜா உற்சாகம்..

லண்டனில் வெற்றிகரமாக சிம்பொனியை இசைத்துவிட்டு நாடு திரும்பிய இளையராஜா, சென்னை விமான நிலையத்தில் உற்சாகமாக பேட்டியளித்தார். அப்போது, இனி தான் எல்லாமே ஆரம்பம் என கூறினார்.

லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையான வேலியண்ட்டை வெற்றிகரமாக அரங்கேற்றியபின், இன்று சென்னை திரும்பினார் இசைஞானி இளையராஜா. விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், தனக்கு 82 வயதாகிவிட்டதாக நினைக்க வேண்டாம், இனி தான் எல்லாமே ஆரம்பம் என கூறியது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

‘வேலியண்ட்‘ சிம்பொனியை அரங்கேற்றிய இசைஞானி

வெறும் 35 நாட்களில், 4 மூவ்மென்ட்டுகளாக இசைஞானி இளையராஜா உருவாக்கிய தனது முதல் சிம்பொனியான ‘வேலியண்ட்‘-ஐ, கடந்த 8-ம் தேதி, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில், அங்குள்ள உலகிலேயே தலைசிறந்த இசைக்குழுவான ராயல் ஃபில்ஹாமோனிக் ஆர்க்கெஸ்ட்ராவை கொண்டு நேரடியாக இசைத்து, அரங்கேற்றினார் இசைஞானி. இதன் மூலம், சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார் இசைஞானி இளையராஜா.

இந்த வரலாற்று நிகழ்வை, 80-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களை வைத்து அரங்கேற்றினார் இளையராஜா. அவரது சிம்பொனி இசை, அங்கு வந்திருந்த ரசிகர்களை கிரங்க வைத்தது. அது மட்டுமல்லாமல், அது குறித்து வெளியான வீடியோக்களும் வைரலாகியுள்ளது.

“அரசு சார்பில் வரவேற்றது நெகிழ்ச்சி அளிக்கிறது“

இந்நிலையில், தனது முதல் சிம்பொனியை வெற்றிகரமாக அரங்கேற்றிவிட்டு நாடு திரும்பிய இசைஞானி இளையராஜாவுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். இந்நிகழ்வில், பாஜக மாநில துணைத்தலைவர் கரு. நாகராஜன், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு மற்றும் திரைத்துறையினர் கலந்துகொண்டனர். பின்னர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு உற்சாகமாக பேட்டியளித்தார் இளையராஜா. 

அப்போது, அனைவரது வாழ்த்தும், இறைவனின் ஆசியும், தனது சிம்பொனி அரங்கேற்றத்தை, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் ஒரு பெரிய நிகழ்ச்சியாக மாற்றியதாக கூறினார். மேலும், முதலமைச்சர் அரசு சார்பில் மரியாதை அளித்து தன்னை வரவேற்றது, நெஞ்சை நெகிழ வைப்பதாக தெரிவித்தார். அதோடு, தமிழக மக்கள் அனைவரும் தன்னை வாழ்த்திக்கொண்டிருப்பது பெருமை அளிப்பதாகவும் கூறினார்.

“சிம்பொனி இசையை டவுன்லோட் செய்ய வேண்டாம்“

அதோடு, தன்னுடைய சிம்பொனி இசையை யாரும் டவுன்லோட் செய்து கேட்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அந்த சிம்பொனி இசையை மக்கள் நேரில் கேட்டு மகிழவேண்டும் என தெரிவித்த அவர், அதற்காக நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவித்தார். மேலும், 13 நாடுகளில் இந்த சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த, ஏற்கனவே தேதிகள் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் இளையராஜா தெரிவித்தார். தமிழர்கள் இல்லாத நாடுகளிலெல்லாம் கூட இந்த சிம்பொனி இசை ஒலிக்கும்போது, நம் மண்ணில் உள்ளவர்கள் அந்த இசையை கேட்க வேண்டாமா என கேள்வி எழுப்பிய அவர், அதற்காக இங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

“82 வயதாகிவிட்டது என நினைக்க வேண்டாம், இனி தான் எல்லாம் ஆரம்பம்“

மேலும், இந்த இசை இதோடு நின்றுவிடாது என கூறிய அவர், இதுதான் ஆரம்பம் என தெரிவித்தார். இவருக்கு 82 வயதாகிவிட்டது, இனி என்ன செய்யப் போகிறார் என்று நினைத்துவிட வேண்டாம், நீங்கள் நினைக்கும் அளவிற்குள் நான் இல்லை என கூறினார். அதோடு, பன்னைபுரத்திலிருந்து வெறும் காலோடு நடந்து புறப்பட்ட தான், வெறும் காலிலேயே நடந்து, இந்த இடத்திற்கு வந்து வெறும் காலில்தான் நிற்பதாகவும், இதை இளைஞர்கள் உணர்ந்து, தன்னை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, அவரவர் துறைகளில் சிறந்து விளங்கி, நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget