மேலும் அறிய

100க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்..! ஓசூரில் பெரும் பரபரப்பு..! நடந்தது என்ன?

ஓசூரில் அரசுப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வாந்தி எடுத்தும், மயங்கி விழுந்ததாலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓசூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென வாந்தி எடுத்தும், மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளி முன்பு மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் குவிந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய நகரமாக திகழ்வது ஒசூர்.  இந்த பகுதியில் உள்ள காமராஜ் காலனியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது உள்ளிட்ட மொழிகள் கற்பிக்கப்படுகிறது.


100க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்..! ஓசூரில் பெரும் பரபரப்பு..! நடந்தது என்ன?

அப்பகுதியின் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வரும் நிலையில், இந்த பள்ளியின் கட்டிடத்தின் முதல் தளத்தில் 6 மற்றும் 7ம் வகுப்பு மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று வழக்கம்போல பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து பாடம் படித்து வந்த நிலையில், திடீரென மாணவர்கள்  அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக ஆசிரியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் பள்ளிக்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. வகுப்பறைகளிலிருந்த மாணவர்கள் வெளியே மைதானத்தில் அமர வைக்கப்பட்டனர். ஆனாலும், அடுத்தடுத்து மாணவர்கள் மைதானத்திலே மயங்கி விழுந்தனர். பல மாணவர்கள் வாந்தி எடுத்தனர். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியதால் மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் பள்ளியின் வளாகத்தில் பதற்றத்துடன் குவிந்தனர். 



100க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்..! ஓசூரில் பெரும் பரபரப்பு..! நடந்தது என்ன?

இந்த சம்பவத்தினால், அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பள்ளியின் வகுப்பறையின் ஜன்னல் வழியாக ஒருவித துர்நாற்றம் வீசிய காரணத்தாலே இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மாணவர்கள் திடீரென அடுத்தடுத்து மயங்கி விழுந்ததற்கு என்ன காரணம்..? திடீரென பள்ளி வளாகத்தில் வீசிய துர்நாற்றத்திற்கு என்ன காரணம்? என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
Aadi Krithigai 2025 Date: ஆடிக்கிருத்திகை நாளையா? ஆகஸ்ட் 16ம் தேதியா? பக்தர்களே விரதம் இருக்க சரியான நாள் இதுதான்!
Aadi Krithigai 2025 Date: ஆடிக்கிருத்திகை நாளையா? ஆகஸ்ட் 16ம் தேதியா? பக்தர்களே விரதம் இருக்க சரியான நாள் இதுதான்!
New 8 EV Cars Launch: ஒரு முறை சார்ஜ் செய்தாலே 500 கி.மீட்டர் பறக்கலாம்.. இந்தியாவில் அறிமுகமாகும் 8 மின்சார கார்கள் லிஸ்ட்!
New 8 EV Cars Launch: ஒரு முறை சார்ஜ் செய்தாலே 500 கி.மீட்டர் பறக்கலாம்.. இந்தியாவில் அறிமுகமாகும் 8 மின்சார கார்கள் லிஸ்ட்!
ரிதன்யாவை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன்.. அய்யோ சாமி கல்யாணமே வேண்டாம்.. நடிகை பிரியங்கா வேதனை
ரிதன்யாவை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன்.. அய்யோ சாமி கல்யாணமே வேண்டாம்.. நடிகை பிரியங்கா வேதனை
Asia Cup: ”நாங்க வரமாட்டோம் போங்கயா” ஓவரா ஆடும் பாகிஸ்தான், ஆசிய கோப்பைக்கு குட்பாய் சொல்லும் பிசிசிஐ
Asia Cup: ”நாங்க வரமாட்டோம் போங்கயா” ஓவரா ஆடும் பாகிஸ்தான், ஆசிய கோப்பைக்கு குட்பாய் சொல்லும் பிசிசிஐ
Embed widget