![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
விழுப்புரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை... நீரில் மூழ்கிய சாலைகள்: கடும் போக்குவரத்து பதிப்பு...
விழுப்புரம்: கனமழையால் மாற்றுச்சாலை தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு
![விழுப்புரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை... நீரில் மூழ்கிய சாலைகள்: கடும் போக்குவரத்து பதிப்பு... Heavy rain in Villupuram traffic in various places விழுப்புரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை... நீரில் மூழ்கிய சாலைகள்: கடும் போக்குவரத்து பதிப்பு...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/13/c176276c0eb704cbcaf0cd27ea37e1791689219047007113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கனமழையால் மாற்றுச்சாலை தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு... மாற்று வழித்தடத்தில் போக்குவரத்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதி...
விழுப்புரத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குடை பிடித்துச் செல்வதும் சிலர் முகத்தில் முகப்பு கட்டி செல்வதுமாக இருந்தனர். விழுப்புரம் மாவட்டத்தின் விழுப்புரம் நகரபகுதி, திருக்கோவிலூர் மற்றும் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான கந்தாடு, முருக்கேரி, கூனிமேடு, பிரம்மதேசம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு கன மழை பெய்தது.
இந்த நிலையில் மரக்காணம் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக சுமார் 3500 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்று பெற்று வந்த உப்பு உற்பத்தி பணிகள் நேற்று முதல் பெய்து வரும் மழையின் காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் அதிகளவு தேங்கி நிற்கிறது. இதில் குறிப்பாக, மாம்பழப்பட்டு பகுதியில் விழுப்புரம் - திருக்கோவிலூர் இடையேயான பிரதான சாலையில், புதிதாக பாலம் கட்டப்பட்டு வரும் இடத்தில் உள்ள மாற்றுச் சாலை தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இந்த மாற்றுச் சாலை தண்ணீரில் மூழ்கியதால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல இயலாது என்று சாலையின் எந்தப் பக்கமும் நேற்றிரவு எச்சரிக்கை செய்யவில்லை. இதையடுத்து, மாற்றுச் சாலை தண்ணீரில் மூழ்கியது தெரியாமல் நேற்றிரவு பேருந்து, லாரி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்றன. பின்னர் மீண்டும் வந்த வழியே திரும்பின. சில வாகனங்கள் எந்த வழியாக செல்வது எனத் தெரியாமல் அங்கேயே நின்றன. இதையடுத்து, இன்று காலை முதல் போக்குவரத்து வாகனங்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பல்வேறு சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)