மேலும் அறிய

‛சொன்னதை கேட்டால் போதும்... ஊரடங்கு தேவையில்லை’ - அமைச்சர் மா.சு., பேட்டி!

”அரசு வழிகாட்டுதலின்படி பொது இடங்களில் மக்கள் நடந்துகொண்டால் ஊரடங்கிற்கு அவசியமில்லை” - மதுரை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி.

தென்னாப்ரிக்காவில் 'ஒமைக்ரான்' எனப்படும் உருமாறிய வைரஸ் கொரோனா தோன்றியதாக கூறப்படுகிறது. இது இப்போது 14 நாடுகளில் பரவ துவங்கியுள்ளது. இதையடுத்து ஜப்பான், இஸ்ரேல் உட்பட பல நாடுகள் வெளிநாட்டு பயணியர் வருகைக்கு தடை விதித்துள்ளன.
 
"ஒமைக்ரான் வைரஸ் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அனைத்து துறையினருடன் நடத்திய ஆலோசனை அடிப்படையில் டிசம்பர் 15-ல் துவங்க இருந்த சர்வதேச விமான போக்குவரத்து ஒத்திவைக்கப் பட்டுள்ளது.நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் எப்போது துவங்கும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்". என சர்வதேச விமான போக்குவரத்தை ஒத்தி வைத்து டி.ஜி.சி.ஏ எனப்படும் விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 

‛சொன்னதை கேட்டால் போதும்... ஊரடங்கு தேவையில்லை’ - அமைச்சர் மா.சு., பேட்டி!
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் புதிய வகை ஓமைக்ரான் (கோவிட்-3) வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை விமான நிலையத்தில் பரிசோதனை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணிய மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து., தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மதுரை விமான நிலையத்தில் ஓமைக்ரான் பரிசோதனை மையத்தை துவக்கி வைத்தார் அப்போது ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் துபாயிலிருந்து மதுரைக்கு வந்த 6 குழந்தைகள் உள்பட 174 பேருக்கு மதுரை விமான நிலையத்தில் ஓமைக்ரான் பரிசோதனை செய்ய 18 பேர் அடங்கிய சுகாதாரக்குழுவினர் பரிசோதனை செய்தனர்.

‛சொன்னதை கேட்டால் போதும்... ஊரடங்கு தேவையில்லை’ - அமைச்சர் மா.சு., பேட்டி!
தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில்.....,” புதிய வகை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 11 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வருகை தந்த 477 பயணிகளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை ஆய்வு செய்ததில் அவர்களுக்கு யாருக்கும் புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் விமான பயணிகளை பரிசோதனை செய்ய RTPCR பரிசோதனை திட்டமிடப்பட்டு., அவர்களை பாதுகாப்பாகவும் காத்திருப்பு அறையில் தனியாக தங்க வைக்கப்படுவர்கள் அதன்பின் அவர்கள் வீட்டுக்குச் சென்றவுடன் மேலும்.,  அவர்கள் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப் பட்டவர்களாக அறிவிக்கப்பட்டு அவர்களை கண்காணிக்க சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுவார்கள்.

‛சொன்னதை கேட்டால் போதும்... ஊரடங்கு தேவையில்லை’ - அமைச்சர் மா.சு., பேட்டி!
தொற்று பாதிப்பு இல்லாத மற்ற நாடுகளில் இருந்து வருகை தரும் நபர்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் இலவசமாக 2% நபர்களுக்க ஆர்.டி.பி.சி.ஆர் செய்ய தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும்., ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய 600 ரூபாய் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அனைத்து விமான பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும்., ஏற்கனவே உள்ள கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து புதிதாக ஓமைக்ரான் வைரஸ் கண்டறியப்படும் நபர்கள் தனி அறையில் அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படும் என தெரிவித்தார். தமிழ்நாடு ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பரவல் இல்லை என்றும்., ஏற்கனவே இருந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் மட்டுமே தற்போது தமிழ்நாட்டில் உள்ளது. பொது இடங்களில் வருகை புரியும் நபர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டுமென்றும்., பல்வேறு இடங்களில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு இருந்தாலும் டாஸ்மாக் கடைக்கு வருகை தரும் நபர்கள் அனைவருக்கும் தடுப்புசி சான்றிதழ் கட்டாயம் என அந்தந்த ஆட்சித் தலைவர்கள் முடிவெடுப்பார்கள் ஓமைக்ரான் வைரஸ் குறித்து முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கை எடுத்து விட்டால் ஊரடங்குக்கு அவசியம் இல்லை. தொடர்ந்து பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல், அனைவரும் தடுப்பூசியை கட்டாயமாக செலுத்தவேண்டும். முகக்கவசம் அணிந்து செல்லுதல் இவை அனைத்தும் இருந்தால் தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் பரவல் குறையும்., ஊரடங்கிற்க்கு அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 

‛சொன்னதை கேட்டால் போதும்... ஊரடங்கு தேவையில்லை’ - அமைச்சர் மா.சு., பேட்டி!
 மதுரை மாவட்டம் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் மோசமான நிலையில் உள்ளது.  முதல் தவணை செலுத்திய நபர்கள் தமிழ்நாடு அளவில் 78% இருந்த போதிலும் மதுரை மட்டும் 71 சதவீதத்தை உள்ளது, இரண்டாம் தவணை 32% பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர். எனவே மதுரை மக்கள் தயவுகூர்ந்து தடுப்புசி செலுத்தி கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.மீண்டும் மதுரை வரும் பொழுது முன்மாதிரியான மாவட்டமாக இருக்க வேண்டும்.
 
கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு RTPCR பரிசோதனையில் தெரிய வரும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து., விமான பயணிகள் வருகையின் போது புதிய வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்களை அனுமதிக்க சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
Trump Greenland NATO: கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
NDA TN Campaign: அதிமுக கூட்டணி அதிரடி! மதுராந்தகத்தில் 2 லட்சம் பேர்! மோடி வருகை: பரபரப்பான ஏற்பாடுகள்!
NDA TN Campaign: அதிமுக கூட்டணி அதிரடி! மதுராந்தகத்தில் 2 லட்சம் பேர்! மோடி வருகை: பரபரப்பான ஏற்பாடுகள்!
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
ABP Premium

வீடியோ

ஏறும் தங்கம்.. எகிறும் பயம் ”இது நடந்தா விலை குறையும்?” நிபுணர்களின் அதிரடி கணிப்பு | Gold Rate Hike
பெண்கள் மேல உரசக்கூடாது! அட்டைப்பெட்டியுடன் ஆண்கள்! வைரல் வீடியோ பரிதாபங்கள்
நடுரோட்டில் பயங்கரம் !DELIVERY BOY-க்கு கத்திக்குத்துசரமாரியாக வெட்டிய நபர்கள்
காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
Trump Greenland NATO: கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
NDA TN Campaign: அதிமுக கூட்டணி அதிரடி! மதுராந்தகத்தில் 2 லட்சம் பேர்! மோடி வருகை: பரபரப்பான ஏற்பாடுகள்!
NDA TN Campaign: அதிமுக கூட்டணி அதிரடி! மதுராந்தகத்தில் 2 லட்சம் பேர்! மோடி வருகை: பரபரப்பான ஏற்பாடுகள்!
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
Gold Silver Rate Jan.20th: ஷாக் மேல் ஷாக் கொடுக்கும் தங்கம்; இன்று ஒரே நாளில் ரூ.3,600 உயர்வு; வெள்ளி கிராம் ரூ.22 அதிகரிப்பு
ஷாக் மேல் ஷாக் கொடுக்கும் தங்கம்; இன்று ஒரே நாளில் ரூ.3,600 உயர்வு; வெள்ளி கிராம் ரூ.22 அதிகரிப்பு
New Renault Duster Hybrid SUV: அட்டகாசம்.! ஹைப்ரிட், ADAS உடன் ஸ்டைலாக வரும் புதிய ரெனால்ட் டஸ்டர்; போட்டி யாரோட தெரியுமா.?
அட்டகாசம்.! ஹைப்ரிட், ADAS உடன் ஸ்டைலாக வரும் புதிய ரெனால்ட் டஸ்டர்; போட்டி யாரோட தெரியுமா.?
ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்.. இந்தியாவையே அலறவிட்ட மொடக்குறிச்சி - 1996ல் நடந்தது என்ன?
ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்.. இந்தியாவையே அலறவிட்ட மொடக்குறிச்சி - 1996ல் நடந்தது என்ன?
டேங்கை நிரப்பினால் 660 கி.மீட்டர் பறக்கலாம்.. Hero Passion Plus பைக் வாங்கலாமா?
டேங்கை நிரப்பினால் 660 கி.மீட்டர் பறக்கலாம்.. Hero Passion Plus பைக் வாங்கலாமா?
Embed widget