கும்மிடிப்பூண்டியில் குழந்தையை சீரழித்து கொன்ற கொடூரம்.. முட்புதரில் கிடந்த சடலம் - நடந்தது என்ன?
கும்ம்பிடிப்பூண்டியி 3 வயது குழந்தை கொலைக்கு நீதி கேட்டு போராடிய பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து முட்புதரில் வீசியுள்ளனர். பாலியல் வன்கொடுமையால் பலத்த காயமடைந்த குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்தது. இதுதொடர்பாக பீகாரைச் சேர்ந்த பிபின் மஞ்சி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடந்தது என்ன?
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சிப்காட் சுற்றுப்பகுதிகளில் பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சிப்காட் பகுதியில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் குடியிருப்பில் 3 வயது பெண் குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பொதுமக்கள் உதவியுடன் தேடினர். அப்போது இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்கள் சிலர் முட்புதரில் குழந்தை காயங்களுடன் உடல்நலம் குன்றி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, குழந்தையை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அருகில் வசித்து வந்த இளைஞர் பெண் குழந்தையிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சிறுமியிடம் வடமாநில இளைஞர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நிலையில், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக பாதிக்கப்பட்ட குழந்தையை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
இதனிடையே, கொடூர செயலில் ஈடுபட்ட வட மாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். சிறுமியை ஒரே அறையில் இருந்த வட மாநில இளைஞர்கள் 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகவும், அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சிப்காட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த பிபின் மஞ்சி 19 என்ற இளைஞரை கைது செய்துள்ளதாக கூறினர்.
Also Read| 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழப்பு.. தவெகவை சாடிய கனிமொழி!
தங்களது வீடுகளிலும் பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளதாகவும், காலையில் வேலைக்கு சென்றால் மாலையில் தான் வீடு திரும்புவதாகவும், தங்களது குழந்தைகளுக்கும் உரிய முறையில் பாதுகாப்பு அளித்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து பொதுமக்களை சமரசம் செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில், குழந்தை உயிரிழந்ததை அடுத்து நீதி கேட்டு போராட்டிய பொதுமக்கள் கைது செய்யப்பட்டனர். தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கொதிப்புடன் தெரிவித்தனர்.
Before You Go
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
ட்ரெண்டிங் செய்திகள்





















