மேலும் அறிய

Governor RN Ravi: இயற்கை விவசாயம் செய்தால் மட்டுமே வளர்ச்சி அடைய முடியும் - விவசாயிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

இயற்கை விவசாயிகள் கலந்துரையாடலில் படித்த மாணவர்கள் விவசாயத்துக்கு திரும்புகிறார்கள் இது மகிழ்ச்சி அளிக்கிறது ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

திருவண்ணாமலை ( Tiruvannamalai News) இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக திருவண்ணாமலைக்கு வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதலாவதாக சாதுக்களுடன் ஓர் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். இரண்டாவது நிகழ்வாக இயற்கை விவசாயிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய விதைகள் வைக்கப்பட்டு இருந்ததை ஆளுநர் பார்வையிட்டார். அப்போது அவருக்கு அதனுடைய தன்மைகள் குறித்து ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் இயற்கை விவசாயிகள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

விவசாயிகளிடம் ஆளுநர் ஆர்.என்‌.ரவி பேசியதாவது, இளைஞர்களை சந்திக்கும் போதும் விவசாயி சொந்தங்களை சந்திக்கும் போதும் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். உழவர்களே முதன்மையானவர்கள் அடுத்தவர்கள் வணிகர்கள். விவசாயிகளை பசியை போக்க கூடியவர்கள். ஆங்கிலேயர் வருகைக்கு முன் தமிழகம் ஜப்பானை விட விவசாயத்தில் முன்னோடியாக விளங்கியது. டெல்டா மாவட்டத்தில் 7.5 மெட்ரிக் டன் ஆக இருந்த நெல் விவசாயம் தற்போது 5.6 மெட்ரிக் டன்னாக குறைத்துள்ளது.

 


Governor RN Ravi: இயற்கை விவசாயம் செய்தால் மட்டுமே வளர்ச்சி அடைய முடியும் - விவசாயிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

 

ரசாயன உரங்களால் மண்ணின் வளம் குறைந்துள்ளது

விவசாயம் தேய்ந்து கொண்டே போனதற்கான காரணம் ஆங்கிலேயர்கள் விதித்த வரி ஆகும்.ரசாயன உரங்கள் பயன்படுத்தியதால் மண்ணின் வளம் குறைந்துள்ளது உரங்களை தவிர்த்து மண் சார்ந்த விவசாயத்திற்கு செல்ல வேண்டும். ஒருங்கிணைந்த விவசாயம் செய்வதன் மூலம் கால்நடைகளின் மூலம் உரம் பெற்று விவசாயம் செய்ய வேண்டும். பிரதமர் மோடியின் மத்திய அரசு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. நவீன தொழில்நுட்பத்தை வழங்குகிறது. இயற்கை விவசாயத்திற்கு நம்மிடமே தொழில்நுட்பம் உள்ளது. விவசாயிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்திடம் கேட்டு அவர்களுக்கு தேவையான அனைத்தையும் பெற்றுக் கொள்ளலாம். படித்த மாணவர்கள் விவசாயத்திற்கு திரும்புகிறார்கள் இது மகிழ்ச்சியை அளிக்கிறது.

 

 


Governor RN Ravi: இயற்கை விவசாயம் செய்தால் மட்டுமே வளர்ச்சி அடைய முடியும் - விவசாயிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

நாடு வளர்ச்சி அடைய விவசாயம் வளர்ச்சி அடைய வேண்டும்

விவசாயிகள் தங்கள் பொருட்களை அப்படியே விற்காமல் மதிப்புக் கூட்டிய பொருளாக மாற்றி விற்பனை செய்வதால் அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு 60 முதல் 70% வரை குறைகள் உள்ளது. இதனை தீர்த்து வைக்கும் கடமை அரசாங்கத்திற்கு உள்ளது. நாடு வளர்ச்சி அடைய வேண்டுமானால் விவசாயம் வளர்ச்சி அடைய வேண்டும்.

2047 ஆம் ஆண்டு வளர்ச்சி அடைந்த பாரதமாக இருக்க வேண்டும் அந்த வளர்ச்சிக்கு விவசாய வளர்ச்சி முக்கியமானதாகும். உலகத்தின் மிகப்பெரிய பிரச்சனையே பருவ நிலை மாற்றம்தான் இதற்கு முக்கிய காரணம் காடுகள் அழிப்பு, உலகில் மூன்றில் இரண்டு பங்கு மனிதர்கள் ஏழ்மையில் வசிக்கின்றனர். அவர்கள் இந்தியா ஏதாவது நமக்கு உதவி செய்யுமா? என்று எதிர்பார்க்கின்றனர். இந்திய விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்தால் மட்டுமே வளர்ச்சி அடைய முடியும். தமிழக விவசாயிகள் பண்பானவர்கள் உலகிற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள் என்று பேசினார்.

தலைப்பு செய்திகள்

பிளஸ்-2 & நீட் பாஸ் பண்ணியிருக்கீங்களா? - சித்தா, ஹோமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ரெடியாகுங்க!
பிளஸ்-2 & நீட் பாஸ் பண்ணியிருக்கீங்களா? - சித்தா, ஹோமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ரெடியாகுங்க!
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
Tamil Nadu Today Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Today Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
போக்சோ, குழந்தை திருமணம், பள்ளி இடைநிற்றலுக்கு முற்றுப்புள்ளி! – விழுப்புரத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் அதிரடி ஆய்வுக் கூட்டம்!
போக்சோ, குழந்தை திருமணம், பள்ளி இடைநிற்றலுக்கு முற்றுப்புள்ளி! – விழுப்புரத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் அதிரடி ஆய்வுக் கூட்டம்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Embed widget