மேலும் அறிய

மருத்துவ படிப்பை தொடர அரசு உதவ வேண்டும் - தமிழக அரசுக்கு உக்ரைன் மாணவர் கோரிக்கை

ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யாவில் இந்தப் படிப்பைத் தொடருவதற்கான வாய்ப்புள்ளதாகவும், அதற்குக் கூடுதல் செலவாகும் எனவும் கூறப்படுகிறது. எங்களது படிப்பை தொடர மத்திய மாநில அரசுகள் உதவி புரிய வேண்டும்

உக்ரைன் நாட்டில் மருத்துவப் பட்டப்படிப்பு படித்து வந்த தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை கருணாவதி நகரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் சூர்யா அரசன் (21) கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்குத் திரும்பினார். அங்குள்ள நிலைமை குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், உக்ரைனில் உள்ள மருத்துவ கல்லுாரியில் ஐந்தாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறேன். ரஷ்யா தொடுத்து வரும் போரால் உக்ரைன் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற போரை நான் இதுவரை பார்த்ததே இல்லை. திரும்பிய பக்கமெல்லாம் குண்டு மழை வீசிய வண்ணம் இருந்தன. எப்படிப் பிழைக்க போகிறோம் என அஞ்சினேன். உயிருடன் வருவோமா மாட்டோமா என பயந்து இருந்தோம். பிப்ரவரி 23 ஆம் தேதி போர் தொடங்கிய நாளில் இருந்து பல்கலைக்கழகம் விடுப்பை அறிவித்துவிட்டது. எனது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் ஆறுதல் கூறினர். இதற்காக  70,000க்கு டிக்கெட் எடுத்தும், நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. நான் மட்டுமல்லாமல், அனைத்து மாணவர்களும் அச்சத்தில்தான் இருந்தோம்.

மருத்துவ படிப்பை தொடர அரசு உதவ வேண்டும் - தமிழக அரசுக்கு உக்ரைன் மாணவர் கோரிக்கை

போர் தொடங்கிய சில நாள்களில் நான் உள்பட 7 மாணவர்கள் 300 கி.மீ. தொலைவில் உள்ள உக்ரைன்-ஹங்கேரி எல்லையைக் கடப்பதற்காக தலா ரூ. 30,000 கொடுத்து சென்றோம். அதிலும் பல்வேறு இடர்பாடுகள் வந்தாலும், அதையும் கடந்து சென்றோம். பின்னர், அங்கிருந்து ரயிலில் ஹங்கேரி நாட்டுக்குப் புறப்பட்டோம். ஆனால் ரயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. ஒரு நாள் காத்திருந்துதான் அங்கு செல்ல முடிந்தது. ஹங்கேரியில் சில நாட்கள் தங்கினோம். அங்கே தன்னார்வலர்கள் பலர் உக்ரைனில் இருந்து வந்தவர்களுக்கு உணவு, இருக்க இடம் கொடுத்து உதவினர்.

இதையடுத்து, இந்திய அரசு மூலம் விமானத்தில் டில்லி வந்து பின்னர் சொந்த ஊருக்கு வந்தேன்.  ஊருக்கு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் போதுமான உதவிகளைச் செய்தன. ஆனால் இன்னமும் உக்ரைன் நாட்டில் எப்படி நாடு திரும்புவது எனத் தெரியாமல் ஏராளமான மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை உடனடியாக மீட்க வேண்டும். நாங்கள் படிக்கும் பல்கலைக்கழகம் மார்ச் 13 ஆம் தேதி வரை விடுப்பு அறிவித்துள்ளது. மீண்டும் எப்படி கல்லூரிக்குச் செல்வது எனத் தெரியவில்லை. படிப்புத் தொடர மத்திய, மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது எனத் தெரியவில்லை. ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷ்யாவில் இந்தப் படிப்பைத் தொடருவதற்கான வாய்ப்புள்ளதாகவும், அதற்குக் கூடுதல் செலவாகும் எனவும் கூறப்படுகிறது. எங்களது படிப்பை தொடர மத்திய மாநில அரசுகள் உதவி புரிய வேண்டும் என்றார். மகன் வந்ததையறிந்த பெற்றோர்கள், உறவினர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget