Gokulraj Case: கோகுல்ராஜ் கொலை வழக்கு; யுவராஜின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு ஒத்திவைப்பு
கோகுல்ராஜ் கொலை வழக்கின் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
![Gokulraj Case: கோகுல்ராஜ் கொலை வழக்கு; யுவராஜின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு ஒத்திவைப்பு Gokulraj murder case yuvraj including other member appeal case verdict postponed Gokulraj Case: கோகுல்ராஜ் கொலை வழக்கு; யுவராஜின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு ஒத்திவைப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/23/4f4be09393d11d25a0859dfc4d6a707e1677154457967571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோகுல்ராஜ் கொலை வழக்கின் யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனு மீதான அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
2015-ல் ஓமலூர் கோகுல்ராஜ் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து யுவராஜ் உட்பட 10 பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். வழக்கில் இருந்து 5 பேர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், கோகுல்ராஜின் தாயாரும் மேல்முறையீடு செய்திருந்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
வழக்கு:
கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுத தண்டனை உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ், அருண், கிரிதர், ரஞ்சித் உள்ளிட்ட 10 பேரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும், கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் 5 பேரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
Also Read: Rajaji Great Grandson: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் - என்ன காரணம்?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)