மேலும் அறிய

ADMK Case: விதியை மீறி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டாரா ஓ.பி.எஸ். ? நீதிபதி அளித்த விளக்கம் என்ன?

பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்தால் அதிமுகவை வழிநடத்த தலைவர் இன்றி கட்சி பாதிக்கப்படும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

அதிமுக விதியை மீறி ஓபிஎஸ் நீக்கம்: நீதிபதி விளக்கம்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதில் கட்சி விதி மீறப்பட்டுள்ளது. கட்சியிலிருந்து ஒரு நபரை நீக்கும் முன் 7 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற கட்சி விதி மீறப்பட்டுள்ளது. இருப்பினும் இடைக்கால தடை விதித்தால் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட கட்சிக்கு இழப்பை ஏற்படுத்தும் என்பதால் தடை விதிக்க முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். 

ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு ஏன்..? 

பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்தால் அதிமுகவை வழிநடத்த தலைவர் இன்றி கட்சி பாதிக்கப்படும். தீர்மானங்களுக்கும் தேர்தலுக்கும் தடை விதித்தால் கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும். தீர்மானங்களுக்கு தடை விதித்தால் ஒருங்கிணைப்பாளர்கள்தான் மீண்டும் கட்சியை நிர்வகிக்க வேண்டிவரும் என நீதிபதி கருத்து தெரிவித்தார். 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பாகவும், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, அதற்கான படிவத்திலும் கையெழுத்திட்டு பொதுச்செயலாளராக தேர்வானார். 

வழக்கு விவரம்:

அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டமானது கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்கவில்லை. இருப்பினும் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, ஓபிஎஸ் நீக்கம் உள்பட சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் இந்த அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாக அமைந்தது. தொடர்ச்சியாக நடந்த மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு கொண்ட அமர்வு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இதனால், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்துக்கு சென்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகவும் பின்னடைவாக அமைந்தது. அதே நேரத்தில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு வெளியானது. 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்கள், தகுதி நீக்கம் ஆகியவற்றிற்கு எதிராக ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு தொடர்ந்தார். இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்குகளில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பு வழங்கினார். இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
Embed widget