![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Former CM Karunanidhi : அண்ணா அறிவாலய சிலையின் நகல்! சிற்பி விவரம்! முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை குறித்து சில விவரம்..
’’சிலையாக நின்று நிலையாக நம்மை வழிநடத்தும் தலைவர் என தொண்டர்களுக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடிதம்’’
![Former CM Karunanidhi : அண்ணா அறிவாலய சிலையின் நகல்! சிற்பி விவரம்! முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை குறித்து சில விவரம்.. Former Chief Minister Karunanidhi's statue unveiled at Omandurar Government Estate in Chennai today Vice President Venkaiah Naidu unveils Former CM Karunanidhi : அண்ணா அறிவாலய சிலையின் நகல்! சிற்பி விவரம்! முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை குறித்து சில விவரம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/28/250f8d4883d09ce6e996fa6b476ed40c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச்சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் இன்று மாலை 5.30 மணிக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்க உள்ளார். இதனை தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விழா பேருரையாற்றவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுன் தலைமை உரையும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரையும் ஆற்றுவார்கள் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![Former CM Karunanidhi : அண்ணா அறிவாலய சிலையின் நகல்! சிற்பி விவரம்! முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை குறித்து சில விவரம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/28/a9eb9f7bc872bafe3f31412585c7008f_original.jpg)
அரை நூற்றாண்டு காலத் தமிழ்நாட்டு அரசியலின் மையமாகத் திகழ்ந்தவர். 60 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு சொந்தமானவர். 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பணியாற்றியவர். அனல் பறக்கும் தம் வசனங்களால் திரையுலகில் தனித்துவம் பெற்றவர். கதை, கவிதை, புதினங்கள், வரலாற்று புதினங்கள், நாடகம் என தான் தொட்ட அனைத்திலும் தனி முத்திரை பதித்தவர். அரசியலிலும், ஆட்சியின் ஆளுமையிலும் தன்னிஅகரற்ற தனி பெருந்தலைவராக வலம் வந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
13 முறை சட்டமன்ற உறுப்பினர்
கருணாநிதி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி முத்துவேலருக்கும், அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். தமது இளம் வயதிலேயே நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தமையால், பேச்சாற்றலிலும், எழுத்தாற்றலிலும் சிறந்து விளங்கினார்.
கருணாநிதி 1957ஆம் ஆண்டு முதன்முதலாக குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1957ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 13 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று சாதனை படைத்தார். 1969ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
சிறப்பான திட்டங்கள்
இதன் தொடர்ச்சியாக 1971, 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் 5 முறை தமிழ்நாட்டில் முதலமைச்சராக பணியாற்றி, தாய் தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம், தமிழ்ச் சமுதாய மக்கள் கல்வியிலும், சமூக நீதியிலும், பொருளாதாரத்திலும் மேம்பட்ட பல்வேறு சிறப்பானத் திட்டங்களை செயல்படுத்தித் தமிழகத்தை இந்திய திருட்நாட்டின் முன்னோடி மாநிலமாக திகழச்செய்தார் என்றால் அது மிகையில்லை.
வாழும் போது வரலாறாகவும், மறைந்தாலும் தமிழ் மக்களின் மனங்களில் நிறைந்துள்ள கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் சிலை எடுக்கும் சீர்மிகு திருநாள்! அது நமக்கு தித்திக்கும் திருநாள்! என குறிப்பிட்டுள்ளார்.
#FatherOfModernTamilNadu முத்தமிழறிஞர் கலைஞருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் சிலை எடுக்கும் சீர்மிகு திருநாள்! அது நமக்கு தித்திக்கும் திருநாள்!
— M.K.Stalin (@mkstalin) May 27, 2022
இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் அவர் தந்த '#DravidianModel' பாதையில் என்றென்றும் பீடுநடை போடுவோம்!#LetterToBrethren pic.twitter.com/cfBvjRYd1V
அண்ணா அறிவாலயத்தில் உள்ளது போன்றே
கருணாநிதி பிறந்த ஜூன் 3-ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும். மேலும் சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி 1.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ளது போன்றே இந்த சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் சிற்பி தீனதயாளன் இந்த சிலையை வடிவமைத்துள்ளார்.
கருணாநிதி சிலை திறப்பு குறித்த மேலும் சில தகவல்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- தொடர்ந்த நட்பு... தொடரும் நேசம்... கலைஞரின் சிலையை திறந்து வைக்கும் துணை குடியரசு தலைவர்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)