மேலும் அறிய

தொடர்ந்த நட்பு... தொடரும் நேசம்... கலைஞரின் சிலையை திறந்து வைக்கும் துணை குடியரசு தலைவர்!

கலைஞர் கருணாநிதியின் முழு உருவ சிலையை வருகின்ற 28ம் தேதி சென்னை, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.

சென்னை அண்ணாசாலையில் ஓமந்தூரார் தோட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வெண்கல சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தநிலையில், வருகின்ற 28 ஆம் தேதி கலைஞர் கருணாநிதியின் சிலை திறக்கப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 26ம் தேதி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் ஒரு அறிக்கை படித்தார். அதில், தான் நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் உண்டென்றால், கலைஞர் ஒருவர்தான். 13 முறை எம்எல்ஏவாக இருந்து, 60 ஆண்டுகள் இந்த மாமன்றத்தின் உறுப்பினராக இருந்தவர் கலைஞர்.திருவாரூரில் முத்துவேலர் அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் நாள், அரசு விழாவாக இனி கொண்டாடப்படும். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரக் கலைஞரின் கலைமிகு சிலை நிறுவப்படும்" என்று அறிவித்தார்.

இதையடுத்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் சிலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தொடங்கியது. சுமார் 16 அடியில் ரூ.1 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் சிலை திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கலைஞர் கருணாநிதியின் முழு உருவ சிலையை வருகின்ற 28ம் தேதி சென்னை, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார்.

விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வெங்கய்யா நாயுடுவையே குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக தலைமை அறிவிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. ஒருவேளை அவர் அறிவிக்கப்பட்டால், திமுகவும் ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் உள்ளது.


தொடர்ந்த நட்பு... தொடரும் நேசம்... கலைஞரின் சிலையை திறந்து வைக்கும் துணை குடியரசு தலைவர்!

சில நாட்களுக்கு முன்னதாக வெங்கய்யா நாயுடு சென்னை வந்த நிலையில், அவரை நேரில் போய் சந்தித்து பேசினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போதே தன்னை குடியரசுத் தலைவராக நிறுத்தினால் ஆதரவளிக்கும்படி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வெங்கய்யா நாயுடு கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.

அதே நேரத்தில் சென்னை வந்து ஆவடியில் தங்கியிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை முதல்வர் மு.க.ஸ்டாலினோ மற்ற அமைச்சர்களோ சென்று வரவேற்காகததும், சந்திக்காததும் குறிப்பிடத்தக்கது.


தொடர்ந்த நட்பு... தொடரும் நேசம்... கலைஞரின் சிலையை திறந்து வைக்கும் துணை குடியரசு தலைவர்!

இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பாஜக ரீதியான கொள்கை பிடிப்பு கொண்டவராக இருந்தாலும், ஆரம்பம் முதலே கலைஞர் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு கொண்டவராக இருந்தார். அதன் தொடர்ச்சியாக முதலமைச்சர் முக ஸ்டாலினுடன் நல்ல பழக்கமும் இருந்தது. அதேபோல், கலைஞர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் பன்வரிலால் புரோகித்துடன் சென்று நலம் விசாரித்தார். 

இந்தநிலையில், கலைஞர் கருணாநிதியின் முழு உருவ சிலையை வெங்கையா நாயுடு திறப்பது எவ்வளவு முக்கியமானதாக கருதப்படுகிறதோ, அதே அளவிற்கு அடுத்த குடியரசு தலைவர் வேட்பாளராக வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டால் திமுக ஆதரவு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பும் முக்கியமாக பார்க்கப்படுகிறது

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை  தேவை - நிர்மலா சீதாராமன்
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை - நிர்மலா சீதாராமன்
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Embed widget