மேலும் அறிய

OPS: ’சந்தர்ப்பவதாத அரசியல் செய்கிறார் ஓபிஎஸ்’ .. கொடநாடு ஆர்ப்பாட்டத்தை விமர்சித்த ஜெயக்குமார்..!

கோடநாடு வழக்கில் தொடர்புடைய விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என டிடிவி தினகரன், ஓ .பன்னிர்செல்வம் நடத்திய ஆர்ப்பாட்டத்தை, முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். 

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என டிடிவி தினகரன், ஓ .பன்னிர்செல்வம் நடத்திய ஆர்ப்பாட்டத்தை, முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். 

கோடநாடு பங்களா விவகாரம் 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் பங்களா ஒன்று இருந்தது. இங்கு அவ்வப்போது அவர் சென்று ஓய்வெடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு உயிரிழந்த பிறகு அங்கு யாரும் செல்லாத நிலையில், 2017 ஆம் ஆண்டு அங்கிருந்த காவலாளியை கொன்று பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

முதலில் இந்த சம்பவத்தில் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இதில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். முந்தைய அதிமுக அரசு, விசாரணை நடத்தி வந்த நிலையில், ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. தற்போது வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படியான நிலையில் கொடநாடு விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி இன்று தமிழ்நாடு முழுவதும் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக - டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக தொண்டர்கள் கண்டன ஆர்ப்பார்ட்டம் நடத்தினர். இதில் தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் - டிடிவி தினகரன் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். 

விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார்

ஓபிஎஸ் அன்றைக்கு சசிகலா, டிடிவி தினகரனை எதிர்த்து அம்மாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கும்ன்னு சொல்லி அவர்கள் சார்ந்த குடும்பத்தை எதிர்த்து தர்மயுத்தம் செய்தார். அதன்பிறகு டிடிவி தினகரனை சந்தித்து அவர் காலில் விழுந்தார். இப்படியான நிலையில் ஓ.பன்னீர்செல்வம் எப்படிப்பட்ட சந்தர்ப்பவாத அரசியலை செய்கிறார் என்பது அதிமுக தொண்டர்களுக்கும், தமிழ்நாடு மக்களும் உணர்ந்திருக்கிறார்கள். திரை மறைவில் சந்தித்து கொண்ட ஓபிஎஸ் -டிடிவி தினகரன் பொதுவெளியில் சேர்ந்தார் போல காட்சியளிக்க இந்த ஆர்பாட்டத்தை நடத்தியுள்ளனர். அதற்கான கதையாக கோடநாடு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்கள். 

இந்த ஆர்பார்ட்ட நாடகத்தில் கோடநாடு விவகாரத்தில் விரைவாக விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பது அவர்களின் கூற்றாக உள்ளது. இந்த விவகாரத்தில் குற்றம் நடந்தவுடன் குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய வழக்குப்பதிவு செய்தது முந்தைய அதிமுக அரசு. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் கொரோனா தொற்றால் வழக்கு விசாரணை தாமதமானது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய நேரத்தில் ஆட்சி மாற்றம் நடந்தது. 

இந்த வழக்கு மேற்கு மண்டல ஐஜி தலைமைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவர் 890 பக்க விசாரணை அறிக்கையை நீலகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் திடீரென்று இந்த வழக்கை திமுக அரசு சிபிசிஐடிக்கு மாற்றியது. இப்போது ஏஎஸ்பி தலைமையில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஏன் 90 சதவிகித விசாரணை முடிந்த பிறகு விசாரணை முந்தைய அதிகாரியை விட பதவி குறைந்தவர்களிடம் கொடுக்கப்பட்டது என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

கல்விக்கடன் கிடைக்காமல் மாணவர்கள் பரிதவிப்பு: பெற்றோரின் சிபில் ஸ்கோர் காரணம்?
கல்விக்கடன் கிடைக்காமல் மாணவர்கள் பரிதவிப்பு: பெற்றோரின் சிபில் ஸ்கோர் காரணம்?
MK Stalin: “கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
“கர்நாடக போக வேண்டாம்” - விஜய்யை எச்சரித்த ஸ்டாலின்! பின்னணி என்ன?
"பால்பண்ணை சந்திப்பைக் கடக்கணுமா? பக்கத்து ஓட்டலில் டீ சாப்பிட்டே வரலாம் !" – திருச்சி மக்களின் கிண்டல் கலந்த வேதனை
தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
டெல்லி நீட் போராட்டம் வாபஸ்! கரப்பான் ஜனதா கட்சி- அரசு இடையே உடன்பாடு; கோரிக்கைகள் நிலை?
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!
மைலேஜ் மன்னன் யார்? பட்ஜெட், சேஃப்டி; நாட்டின் பெஸ்ட் 100 சிசி பைக்குகள் லிஸ்ட், ஒப்பீடு!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
Honda ZRV Price: BMW X1, Skoda Kodiaq-க்கு போட்டியாக வந்த ப்ரீமியம் ஹைப்ரிட் கார்; ஹோண்டா ZR-V-ன் விலை இவ்வளவா.?!
BMW X1, Skoda Kodiaq-க்கு போட்டியாக வந்த ப்ரீமியம் ஹைப்ரிட் கார்; ஹோண்டா ZR-V-ன் விலை இவ்வளவா.?!
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Embed widget