![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Flood Risk Warning Update: செவித்திறன் குறைபாடு உடையோருக்கான வெள்ள அபாய முன்னெச்சரிக்கை
மாற்றுத்திறனாளிகள் வெளியேறும் போது உங்கள் ஆவணங்கள் மற்றும் மருந்துகளுடன் உங்கள் உதவி சாதனங்களையும் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
![Flood Risk Warning Update: செவித்திறன் குறைபாடு உடையோருக்கான வெள்ள அபாய முன்னெச்சரிக்கை Flood risk warning information for the hearing impaired, know in details Flood Risk Warning Update: செவித்திறன் குறைபாடு உடையோருக்கான வெள்ள அபாய முன்னெச்சரிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/07/302f6ad87b19cd035c7d26b62124a071_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையில் தொடர் கனமழை பெய்து வருவதால், செவித்திறன் குறைபாடு உடையோருக்கான வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவல்கள் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை: அடையாறு ஆற்றின் கீழ் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாற்றுத்திறனாளிகள் வெளியேறும் போது உங்கள் ஆவணங்கள் மற்றும் மருந்துகளுடன் உங்கள் உதவி சாதனங்களையும் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று பதிவிடப்பட்டுள்ளது.
Flood warning: People living in low-lying downstream areas near Adyar river are requested to vacate to safer places.
— Commissioner for Welfare of Differently Abled, TN (@Tn_Diff_abled) November 7, 2021
Differently abled people are requested to take your assistive devices along with your documents and medicines when evacuating.#ChennaiRains pic.twitter.com/PStBdqrezY
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பரவலாக பெய்து வந்த மழை, கடந்த ஓரிரு தினங்களாக தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டிவருகிறது.
இதனால், மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 9-ந் தேதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே, விடிய விடிய பெய்துகொண்டிருக்கும் மழையால் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட புரசைவாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னைக்கு வருபவர்கள் தங்களது பயணத்தை 2, 3 நாள்கள் ஒத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
Dear Chennaiites
— Greater Chennai Corporation (@chennaicorp) November 2, 2021
For flood related grievances please call:
04425619206
04425619207
04425619208#ChennaiCorporation#HeretoServe pic.twitter.com/XtKMn7w7OM
1913, 04425619206, 044 - 25619207, 044 - 25619208 என்ற தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம்.
மேலும் 9445477205 என்ற வாட்ஸ் அப் மூலமும் புகாரை தெரிவிக்கலாம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)