Erode power outage: ஈரோட்டில் நாளை(05-02-2026) 8 மணி நேரம் மின் தடை... எந்தெந்த இடங்களில் இதோ முழு விவரம்
Erode power outage: ஈரோடு மாவட்டத்தில் நாளை(05-02-2026) பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படவுள்ளது, இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது

ஈரோடு மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் நாளை ( பிப்ரவ்ரி 05, 2026, வியாழக்கிழமை) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்சாரம் தடைப்படும் பகுதிகள்:
கங்காபுரம்
பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, காரட்
இங்கூர்
தெற்கு பெருந்துறை பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கோவுண்டாச்சிபாளையம், ஈங்கூர், பள்ளப்பாளையம், முகசிபிடாரியூர் வடக்கு பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நாசவளர் காலனி, பெருந்துறை ஆர்.
திங்களூர்
திங்களூர், கல்லாகுளம், வேட்டையன்கிணறு, கிரே நகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டகவுண்டன்பாளையம், சுங்கக்காரன்பாளையம், சினாபுரம் மேற்கு பக்கம் மட்டும், மேட்டூர், செல்லப்பா.
மின்வெட்டு நேரத்தில் தேவையான முன்னெச்சரிக்கை:
மின்தடை நேரத்தில் திடீர் விபத்துகளை தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
























