மேலும் அறிய

Erode East Bypoll: பயம்..! திமுக+ மீதா? தோல்வி மீதா? இடைத்தேர்தலை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள், யாருக்கு லாபம்?

Erode East Bypoll: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது.

Erode East Bypoll: அதிமுகவின் அறிவிப்பால், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி எளிதாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மறைவை தொடர்ந்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, வரும் 5ம் தேதி அந்த தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறையும் தொடங்கியுள்ளது. திமுக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக உள்ள, வி. சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள்:

தற்போதைய சூழலில் திமுக மட்டுமே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது. அதேநேரம், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. அந்த கூட்டணியில் உள்ள தேமுதிகவும் அதே முடிவை எடுத்துள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் இடைத்தேர்தலில் போட்டியில்லை என அறிவித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முடிவு இன்னும் வெளியாகவில்லை. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த சூழலில், இடைத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதற்கு காரணம், திமுக மீதான பயமா? அதன் கூட்டணி மீதான பயமா? அல்லது தோல்வி மீதான பயமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

திமுக கூட்டணி மிது பயமா?

திமுகவின் தொடர் தேர்தல் வெற்றிகளுக்கு அதன் வலுவான கூட்டணியே காரணம் என நம்பப்படுகிறது. அதே கூட்டணி தொடர்வதால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் அவர்களுக்கே வெற்றி சாத்தியம் என கூறப்படுகிறது. இதை உணர்ந்ததால் தான், அதிமுக போன்ற பிரதான எதிர்க்கட்சிகளே தேர்தலை புறக்கணிப்பதாகவும் தெரிகிறது. அதேநேரம், மக்கள் உடனான கூட்டணி மட்டுமே வெற்றியை தீர்மானிக்கும் என்பதை உணர்ந்து, களத்தில் இறங்கி பணியாற்றி இருந்தால் எதிர்க்கட்சிகளின் பலம் நிச்சயம் கூடியிருக்கும் என்பதே நிதர்சனம். ஆளுங்கட்சியினருக்கு அவர்களது ஆட்சியின் நிலை என்ன என்பதையும் மக்கள் உணர்த்த வாய்ப்பு கிடைத்து இருக்கும்.

தோல்வியை கண்டு பயமா?

தேமுதிக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன சூழலில் இருக்கும் நிலையில், பாஜக தமிழ்நாட்டில் தனக்கான ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் இன்னும் போராடி வருகிறது. அதிமுக தான் இன்றளவும் திமுகவிற்கு மாற்றாக கருதப்படுகிறது. ஆனால், 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என தொடர்ந்து அக்கட்சி தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இதன் விளைவாகவே கடந்த ஆண்டு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அக்கட்சி புறக்கணித்தது. அதன் தொடர்ச்சியாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், தோல்வியை எதிர்கொள்ள தயங்கினால், கட்சியை வலுப்படுத்துவது எப்படி? போட்டியே இன்றி திமுக வெற்றி பெற்றால், தமிழ்நாட்டில் அதிமுகவின் பலம் தான் என்ன? என பல கேள்விகள் எழுகின்றன.

கோட்டை விடுகிறாரா ஈபிஎஸ்?

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, ”சட்ட-ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துளது, நீட் தேர்வு ரத்து போன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, கள்ளச்சாரய உயிரிழப்பு, திமுகவினர் அராஜகம்” என நூற்றுக்கணக்கான கண்டன அறிக்கைகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதை அனைத்தையும் சரியான முறையில் பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே, ஆட்சியின் மீது பொதுமக்களிடம் அதிருப்தி இருந்தால், அதனை தங்களுக்கான வாக்குகளாக அறுவடை செய்யலாம். ஆனால், அதை எதையுமே செய்யமால், இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியினரின் அராஜகம் இருக்கும் போன்ற வழக்கமான காரணங்களை சுட்டிக் காட்டி தேர்தலை புறக்கணிப்பது என்பது எப்படி அதிமுகவிற்கு பலனளிக்கும். தேர்தலில் போட்டியிடுவதால் தொடர் தோல்வி என்பதை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால், வீழ்ச்சியில் இருந்து அந்த கட்சி மீண்டு வந்துள்ளது என்பதை மக்களிடையே எப்படி கொண்டு போய் சேர்க்க முடியும்?

யாருக்கு பலன்?

புறக்கணிப்பு என்ற எதிர்க்கட்சிகளின் முடிவால், திமுக கடும் போட்டி என்பதே இன்றி எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்ற நிலையே நிலவுகிறது. இத்தகைய வெற்றியால், திமுக பலம் வாய்ந்த கட்சியாக இருப்பதாக உருவாகும் பிம்பம், எதிர்காலத்தில் இன்னும் தங்களுக்கு ஆபத்தாக மாறும் என்பதை எடப்பாடி பழனிசாமி உணரவில்லையா? அல்லது இன்னும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே அவகாசம் உள்ளது, அதற்கான பயிற்சிகளமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பரிசீலிக்கலாம் என்பது குறித்து அவர் சிந்திக்கவில்லையா? தொடர் தோல்வியால் தனது இமேஜ் டேமேஜ் ஆவதை மட்டுமே கருத்தில் கொண்டு, தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவை எடப்பாடி பழனிசாமி எடுத்திருப்பாரே ஆனால் அதன் மொத்த பலனும் திமுகவிற்கு மட்டுமே என்பதே உண்மை. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
ABP Premium

வீடியோ

கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
Maruti Ertiga: 7 சீட்டர்.. மாஸ் காட்டும் Maruti Ertiga - விலை, மைலேஜ் எப்படி?
Maruti Ertiga: 7 சீட்டர்.. மாஸ் காட்டும் Maruti Ertiga - விலை, மைலேஜ் எப்படி?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
Embed widget