மேலும் அறிய

Erode East By Election: "பா.ஜ.க. முடிவுக்குத்தான் கட்டுப்படுவேன்.." இ.பி.எஸ்.க்கு அதிர்ச்சி அளித்த ஏ.சி. சண்முகம் - இடைத்தேர்தலில் புது நெருக்கடி

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறது. அந்த வகையில், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகத்தை சந்தித்த எடப்பாடி தரப்பு ஆதரவு கோரியது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இரு பெரும் திராவிட கட்சிகளும் தேர்தலில் முனைப்பு காட்டி வருகிறது.

ஈரோடு இடைத்தேர்தல்:

இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் களம் காணும் நிலையில், அக்கூட்டணியின் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன், பல்வேறு தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்.

ஆளும் தரப்பில் காங்கிரஸ் வேட்பாளர் உறுதியான நிலையில், பிரதான எதிர்கட்சியான அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் அதிமுக போட்டியிடுமா? அல்லது பாஜக போட்டியிடுமா? என்பதில் தொடர் குழப்பம் நீடித்து வருகிறது.

அதிர்ச்சி தந்த ஏ.சி.எஸ்.

இருந்தபோதிலும், அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறது. அந்த வகையில், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகத்தை சந்தித்த எடப்பாடி தரப்பு ஆதரவு கோரியது. ஆனால், அதை அவர் நிராகரித்துள்ளார். மேலும், பாஜக எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் இடைத்தேர்தலில் முனைப்பு காட்டி வருகிறது. பாஜக தலைவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வாசன் ஆகியோரை சந்தித்து பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றது. 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றிருந்தார். அவர் மாரடைப்பு காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழக்க, அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப் பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

2021 தேர்தலை போலவே இந்த முறையும் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது திமுக. ஆனால், முன்னதாக, வேட்பாளர் தேர்வில் தொடர் குழுப்பம் நிலவி வந்தது.

மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தை இளங்கோவனை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் மேலிடமும் திமுகவும் விரும்புவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால், தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என இளங்கோவன் கூறினார்.

மேலும், இந்த இடைத்தேர்தலில் இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட முனைப்பு காட்டி வந்ததாகவும் கூறப்பட்டது. எனவே, வேட்பாளர் தேர்வில் தொடர் குழுப்பம் நீடித்து வந்தது. இறுதியில், இளங்கோவனே வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget