மேலும் அறிய

ADSP VELLADURAI SUSPENSION: என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏடிஎஸ்பி வெள்ளதுரை சஸ்பெண்ட் - காரணம் என்ன?

ADSP VELLADURAI SUSPENSION: லாக்-அப் மரணம் தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள சூழலில், ஏடிஎஸ்பி வெள்ளதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ADSP VELLADURAI SUSPENSION: என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளதுரை பணியிடை நீக்கம்:

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளதுரை பணியில் இருந்து இன்று ஓய்வு பெற இருந்த நிலையில், ஒருநாளைக்கு முன்னதாக நேற்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  2004ல் வனக் கொள்ளையர் வீரப்பனை சுட்டுக் கொன்றதாகக் கருதப்படும் காவல்துறை அதிகாரியான வெள்ளதுரை, அயோத்திக்குப்பம் வீரமணியை மெரினாவில் என்கவுண்டரில் கொன்றதன் மூலம் கவனம் பெற்றார். வீரப்பனை தேடும் சிறப்பு அதிரடிப்படையில் இவர் இடம்பெற்று இருந்தார். உதவி காவல் ஆய்வாளராக பணியைத் தொடங்கிய இவர்,  கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (AdSP) உயர்ந்துள்ளார்.  2021 மே 7 ஆம் தேதி திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களை அச்சுறுத்தும் கும்பல்களைக் கண்காணிக்க வெள்ளதுரை டெப்டடேஷனில் நியமிக்கப்பட்டார். திருவண்னாமலையில் மாவ்ட்ட குற்றவியல் ஆவண காப்பாக ஏடிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தார். அவரது பணிக்காலம் முடிவடையவிருந்த நிலையில், மாநில டிஜிபி மற்றும் போலீஸ் படைத் தலைவர் (ஹோபிஎஃப்) சங்கர் ஜிவால் அமைதியான முறையில் ஓய்வு பெற பரிந்துரைத்து இருந்தார். ஆனால்,  மாநில உள்துறை வெள்ளதுரையை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

பணியிடை நீக்கத்திற்கான காரணம் என்ன?

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தியில் ஜூன் 6, 2013 அன்று புகாரளிக்கப்பட்ட, ராமு என்கிற (26) என்கிற குமார் என்ற கொக்கி குமார் என்பவர்,  போலீஸ் காவலில் இருந்தபோது மரணமடந்த வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதாக இந்த இடைநீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குமாரின் வழக்கு சிபி-சிஐடி விசாரணைக்கு அனுப்பப்பட்டது மற்றும் காவல் ஆய்வாளர் எஸ் கீதா தனது இறுதி அறிக்கையை 2023 ஆம் ஆண்டில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

வழக்கு விவரம்:

ஆவரங்காடு ரயில் நிலையம் அருகே உள்ள திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் இருந்து குமார் 500 ரூபாயை கொள்ளையடித்ததாக போலீஸார் தெரிவித்தனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துரை சிங்கம் தலைமையில் போலீசார் சென்று குமாரை கைது செய்தனர். போலீசாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார். அப்போது ஏற்பட்ட கைகலப்பில், குழியில் விழுந்து, கால்களிலும், உடலிலும் காயம் ஏற்பட்டது. பின்னர், மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னதாக கடந்த ஜனவரி 5, 2012 அன்று நடைபெற்ற பாண்டியர் குரு பூஜை விழா காளையார் கோயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த திருப்பாசேதி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ஆல்வின் சுதன் சுட்டுக்கொல்லப்பட்டார்.  இதுதொடர்பான காவல்துறை நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்ட புதுக்குளத்தைச் சேர்ந்த எம்.பிரபு மற்றும் பாரதி ஆகியோரின் நெருங்கிய கூட்டாளி தான் குமார் ஆவார். அந்த நேரத்தில்  சிவகங்கை மாவட்டத்தில் டிஎஸ்பி ஆக இருந்த, வெள்ளதுரையின் உத்தரவின் பேரில் தான் குமார் அடித்துக் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.   

இதனிடையே, ஜூலை 23, 2003 அன்று அயோத்திக்குப்பம் வீரமணியை வெள்ளதுரை கொன்றபோது, ​​மெரினா காவல் நிலைய முன்னாள் காவல் ஆய்வாளர் லாயிட் சந்திராவிடமும் உள்துறை விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget