"கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே ட்வீட் போடாதீங்க" முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுத்த இபிஎஸ்
தான் பொம்மை முதலமைச்சர் என்பதை ஸ்டாலின் மணிக்கு ஒரு முறை நிரூபித்து வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், ஞானசேகரன் குற்றவாளி தான் என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மீது விமர்சனம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தான் பொம்மை முதலமைச்சர் என்பதை ஸ்டாலின் மணிக்கு ஒரு முறை நிரூபித்து வருவதாக சாடியுள்ளார்.
"கொஞ்சமும் கூச்சமின்றி ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்ட திமுக"
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "தான் ஒரு பொம்மை முதலமைச்சர் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். உங்கள் அரசு இந்த வழக்கை நடத்திய லட்சணத்தைப் பார்த்த பிறகு தானே உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணைக்கு உத்தரவிட்டது?
அஇஅதிமுக திட்டங்களுக்கு தான் ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்கள் என்றால், நீதிமன்ற நடவடிக்கைக்கும் கொஞ்சமும் கூச்சமின்றி ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறீர்களே? உங்கள் காவல்துறை நீதியைப் பெற்றுத் தந்ததா? அப்படியென்றால், உங்களுக்கோ, உங்கள் அரசுக்கோ துளியும் சம்மந்தம் இல்லாமல், அரசியல் குறுக்கீடு இன்றி நடக்க வேண்டிய SIT விசாரணையை நீங்கள் Influence செய்தீர்கள் என்று வாக்குமூலம் அளிக்கிறீர்களா?
முதல்வர் ஸ்டாலின் மீது கடும் விமர்சனம்:
குற்றங்கள் நடக்கக் கூடாது என்று தொடர்ந்து நீங்கள் கூறி வந்தும் இத்தனை குற்றங்கள் நடக்கிறது என்றால், நீங்கள் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? இன்றைய குற்றவாளி உங்கள் திமுக அனுதாபி ஞானசேகரன்! கண்ணாடியைப் பார்த்துக் கொண்டே ட்வீட் போடாதீர்கள் என்று எத்தனையோ முறை சொல்லிவிட்டேன் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே!
தான் ஒரு பொம்மை முதலமைச்சர் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்து வருகிறார் திரு. @mkstalin.
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) May 28, 2025
உங்கள் அரசு இந்த வழக்கை நடத்திய லட்சணத்தைப் பார்த்த பிறகு தானே உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணைக்கு உத்தரவிட்டது?
அஇஅதிமுக திட்டங்களுக்கு தான் ஸ்டிக்கர்… https://t.co/um0jwilzyV
"SIR"-ஐக் காப்பாற்றும் உங்கள் ஆட்சி சட்ட நீதிக்கும் - பெண்கள் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரான ஆட்சி! இந்த ஆட்சி வீழும்! மக்களுக்கான அதிமுக ஆட்சி அமையும்! அந்த "SIR"-ம், சாருக்கு பின்னால் உள்ள எல்லா சார்களும் பதில் சொல்லியே ஆகவேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.





















