E-Pass: நீலகிரியின் 4 இடங்களில் மட்டும் இ பாஸ்..சுற்றுலா போறவங்க நோட் பண்ணிக்கோங்க!
E-Pass In Nilgiris: நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 4 இடங்களில் மட்டும்தான் என மாவட்ட நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் பிரசித்திப்பெற்ற தலமான நீலகிரிக்கு வரும் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்கு, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இ-பாஸ் நடைமுறையானது கட்டாயமாக்கப்பட்டது. இந்த இ-பாஸ் நடைமுறையானது 4 நுழைவாயில்களில் மட்டுமே பின்பற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.
நீலகிரி-இ பாஸ்:
நீலகிரியானது கடல் மட்டத்திலிருந்து, 900 மீட்டர் முதல் 2636 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வடக்கே கர்நாடகா மாநிலமும், கிழக்கே கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டமும், கேரளா மாநிலமும், மேற்கே கேரளா மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன. நீலகிரியின் இயற்கை அழகும் மற்றும் குளிர்ச்சியான வானிலையும் பலரை ஈர்க்கும் இடமாக இருக்கிறது. இதனால், கோடை காலத்தில் பலரது சுற்றுலா செல்லும் விருப்பமான இடங்களில் ஒன்றாக நீலகிரி இருக்கின்றது. மேலும், கோடை விடுமுறை என்பாதாலும், அதிக மக்கள் படையெடுப்பதால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இ பாஸ் நடைமுறையானது கொண்டுவரப்பட்டுள்ளது.
Also Read: Video: கயிற்றை பிடித்து கிணற்றுக்குள் இறங்கும் பெண்கள்! உயிருக்கு ஆபத்துடன் தண்ணீர் எடுக்கும் நிலை!
4 இடங்களில் மட்டும் இ பாஸ்:
இ பாஸ் நடைமுறை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளதாவது, மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்திற்கு 01.04.2024 முதல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.தற்போது 07.04.2025 அன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அறிவுரையின்படி பின்வரும் நுழைவு வாயில்களில் மட்டும் இ-பாஸ் நடைமுறை பின்பற்றப்படும்.குறிப்பாக 1. கல்லாறு, 2. குஞ்சப்பணை, 3. மசினகுடி, 4. மேல்கூடலூர் ஆகிய 4 இடங்களில் இந்த நடைமுறை 22.04.2025 முதல் அமலுக்கு வருகிறது.

Also Read: Subhanshu Shukla: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இந்தியர்: சுபான்ஷூ சுக்லா யார்?
இ பாஸ் பெறுவது எப்படி?
இ-பாஸ் நடைமுறை அமலாக்கப்படுவதை தொடர்ந்து, வெளி மாவட்ட, வெளி மாநில சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறையானது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீலகிரி மாவட்ட பதிவு எண் TN 43 பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு E பாஸ் தேவையில்லை. இந்நிலையில், இ-பாஸ் பெறுவதற்கு https://epass.tnega.org/home என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யலாம். பயணிகள் தங்களது செல்லிடப்பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம், மேலும் ஒரு வாகனத்திற்கு ஒரு இ-பாஸ் போதுமானது.
Before You Go
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
ட்ரெண்டிங் செய்திகள்






















