மேலும் அறிய

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டி குடிநீர் பஞ்சத்தை போக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கொள்ளிடம் ஆற்றில் பல தடுப்பணைகளை கட்டி விவசாயத்தையும் பொதுமக்களின் குடிநீர் பஞ்சத்தையும் தமிழக அரசு போக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

கொள்ளிடம் ஆற்றில் பல தடுப்பணைகளை கட்டி விவசாயத்தையும் பொதுமக்களின் குடிநீர் பஞ்சத்தையும் தமிழக அரசு போக்க வேண்டும் என்றும் தடுப்பணை கட்டி தண்ணீர் தேங்கி விட்டால் மணல் கொள்ளை அடிக்க முடியாது என தமிழக அரசு தடுப்பணை கட்ட தயங்குவதாகவும் கொள்ளிடத்தில் ஒவ்வொரு நான்கு கிலோமீட்டர் ஒரு மணல் குவாரி இருப்பதாகவும் திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளில் 26 புதிய மணல் குவாரிகளை கொண்டு வந்திருப்பதாகவும் அன்புமணி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்'என்ற பெயரில் 100 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டு இருக்கும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மயிலாடுதுறை மாவட்டம் அளக்குடி கிராமத்தில் உள்ள கொள்ளிடம் தடுப்பணையை பார்வையிட்டு அங்குள்ள விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். 

பின்னர் அன்புமணி ராமதாஸ் பேச்சு:

ஒரு ஆண்டுக்கு குறைந்தது 50 டிஎம்சி நீர் கொள்ளிடம் ஆறு வழியாக சென்று கடலில் கலக்கிறது. ஆனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகளும் மக்களும் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. 

கொள்ளிடம் ஆற்றில் பல இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம் ஆனால் தமிழக அரசு செவி சாய்க்க மறுக்கிறது. 

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் இது குறித்து நான் தலைமைச் செயலகம் சென்று நேரில் வலியுறுத்தினேன் உடனே அதிகாரிகளை அழைத்து அன்புமணியின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என உத்தரவிட்டார் ஐஐடி அதிகாரிகளும் வந்தார்கள் அளவெடுத்தார்கள் 750 கோடி ஆகும் என்று சொன்னார்கள் ஆனால் தற்போது வரை அந்த தடுப்பணை திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் அப்படியே உள்ளது.

நான் கோரிக்கை வைத்தது போல இந்த பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டால் சுற்றுவட்டார 20 கிலோமீட்டர் பகுதியில் உள்ள கிராம விவசாயிகள் அதிக அளவில் விவசாயம் செய்யலாம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாயிகள் பயன்பெறுவார்கள். கிராம மக்களின் குடிநீர் பிரச்சனையும் இருக்காது.

கொள்ளிடம் ஆற்றின் கறைகள் பலவீனம் ஆகியுள்ளன அவற்றை பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது ஆனால் இது குறித்து எல்லாம் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இருப்பதாக தெரியவில்லை.  ஆற்றின் கறைகள் வெள்ளப்பெருக்கு காலத்தில் உடைந்தால் பல கிராமங்கள் அழிந்து போகும் நிலை ஏற்படும் அது குறித்து எல்லாம் தமிழக அரசு கவலைப்படாமல் செயல்பட்டு வருகிறது. 

பொதுமக்களின் வாக்குகள் மட்டும் வேண்டும் ஆனால் பொதுமக்கள் என் பாதுகாப்பிற்காக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதற்கு மேலும் அந்த கறைகளை பலப்படுத்த, பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடுமையான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளை அடிக்க முடியாது என்பதனால் தான் அங்கு தடுப்பணைகளை கட்ட தமிழக அரசு தயங்குகிறது. திமுக ஆட்சிக்கு வந்த இந்த நான்கரை ஆண்டுகளில் இதுவரை 26 மணல் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக கொள்ளிடம் ஆற்றில் தான் அதிகமான மணல் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள் கொள்ளிடம் ஆற்றில் ஒவ்வொரு நான்கு கிலோமீட்டர் ஒரு மணல் குவாரி உள்ளது. 

மணல் குவாரிகளை கட்டி தண்ணீர் தேங்கி நின்றால் அதன் பிறகு மணலை கொள்ளை அடிக்க முடியாது என்பதனால் திமுக அரசு செய்ய மறுக்கிறது. 

மக்களைப் பற்றியோ விவசாயம் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ திமுக அரசுக்கு எந்த கவலையும் இல்லை மக்களின் பணத்தை கொள்ளை அடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.  மீண்டும் திமுக வெற்றி பெற்றால் மக்கள் வாழ முடியாது மக்கள் அகதிகளாக வேறு இடங்களுக்கு தான் குடிபெயர வேண்டும்.

தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்கு பணம் கொடுத்து உங்களின் வாக்குகளை பெறுவதற்காக திமுகவினர் பணமூட்டைகளோடு வருவார்கள் வாக்குக்கு ஆயிரம் இரண்டாயிரம் என அள்ளிக் கொடுப்பார்கள் ஏமார்ந்து விடாதீர்கள்.  இந்த அளக்குடி பகுதிக்கு இதுவரை எந்த அரசியல்வாதியும் வந்தது கிடையாது நான் மூன்றாவது முறையாக வந்திருக்கிறேன் முதலமைச்சரை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்து இருக்கிறேன் முதலமைச்சர் கடிதம் எல்லாம் எழுதி இருக்கிறேன் இந்த பிரச்சனை தீர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Embed widget