![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
திமுக அரசின் ஓராண்டு சாதனை என்பது பொய்.. முதல்வர் உரையை புறக்கணித்து, ஈ.பி.எஸ் விமர்சனம்
கடந்த ஓராண்டு திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு கெட்டுபோயுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
![திமுக அரசின் ஓராண்டு சாதனை என்பது பொய்.. முதல்வர் உரையை புறக்கணித்து, ஈ.பி.எஸ் விமர்சனம் DMK government one year acheivement is a lie Edapadi palanisami திமுக அரசின் ஓராண்டு சாதனை என்பது பொய்.. முதல்வர் உரையை புறக்கணித்து, ஈ.பி.எஸ் விமர்சனம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/08/0e67499afacc2c8c60d92cca3908cc97_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திமுக அரசின் ஓராண்டு சாதனை என்பது பொய் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பழனிசாமி, ”திமுக அரசின் ஓராண்டு சாதனை என்பது பொய்யான விளம்பரம் என்றும், அதிமுகவின் திட்டங்களைத்தான் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்றும், புதிதாக எந்த திட்டங்களையும் திமுக ஆட்சியில் தொடங்கி வைக்கவில்லை எனவும் கூறினார். கடந்த ஓராண்டு திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுபோயுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். 50 ஆண்டுகால காவிரி பிரச்னைக்கு தீர்வு கண்டது அதிமுக அரசு” என்றும் கூறினார்.
#BREAKING | ஓராண்டு திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டு போயுள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி https://t.co/wupaoCQKa2 | #DMK #MKStalin #AIADMK #edappadikpalaniswami pic.twitter.com/5r05zAqIbk
— ABP Nadu (@abpnadu) May 7, 2022
முன்னதாக, தமிழ்நாட்டு மக்களுக்கு பயன்தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி திமுகவின் ஓராண்டு ஆட்சி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். பலவற்றில் திமுக அரசின் அணுகுமுறையை கண்டு மக்கள் முகம்சுளிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் பூரண மதுவிலக்கு குறித்து திமுக பேசாததால் மக்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆனதையொட்டி அக்கட்சியை சேர்ந்தவர்கள் கொண்டாடிவரும் நிலையில், திமுக அரசின் ஓராண்டை விமர்சிக்கும் வகையில் சென்னை முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. திமுக ஆட்சி ஓராண்டு ஆனதையொட்டி கருணாநிதி படத்துக்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளிடமும் முதலமைச்சர் வாழ்த்து பெற்றார். இதனைத்தொடர்ந்து, மாநகர் பேருந்தில் திடீரென்று ஏறி ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு, தலைமைச்செயலகத்தில் திமுக அரசின் ஓராண்டு சாதனை புத்தகத்தை வெளியிட்டார்.
இந்த நிலையில், திமுக அரசின் ஓராண்டை விமர்சிக்கும் வகையில் சென்னை முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டரில், ”விடியா ஆட்சியின் ஓராண்டு வேதனை. இருளில் தவிக்கும் தமிழகம். மின்மிகை To மின்வெட்டு” என்று எழுதப்பட்டுள்ளது. அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் இந்த போஸ்டர் ஒட்டுப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)